குதிரைமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேல்வானிலிருந்து பார்க்கும்போது குதிரை-முகம் போலத் தோற்றம் அளிக்கும் மலை. "ஊராக் குதிரை" (புறநானூறு 168)

குதிரைமலை, ஆனைமலை தோட்டிமலை போன்ற மலைப்பெயர்கள் அவற்றின் உருவத்தால் பெயர் பெற்றவை.

பிட்டன் [1] பிட்டன் மகன் பிட்டங்கொற்றன் [2] (அதியமான் நெடுமான்) அஞ்சி [3] அதியமான் மகன் பொகுட்டெழினி [4] ஆகியோர் இதனை ஆண்ட சங்ககால அரசர்கள்.

குதிரைமலை குதிரை போல் உருவம் கொண்டிருந்தது. [5] மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து செல்ல இந்த மலைப்பகுதியில் கணவாய்(கவாஅன்) ஒன்று இருந்தது. இதனைக் குதிரைக் கவான் என வழங்கினர். இங்குள்ள சுனையில் மக்கள் நீராடி மகிழ்வது வழக்கம். [6] இங்கு வாழ்ந்த மக்கள் மழவர் குடியினர். இவர்கள் பழனி எனப்படும் பொதினி மலை அரசன் முருகனைத் தாக்கினர். ஆவியர் குடிமக்களின் அரசன் முருகன் இவர்களை விரட்டினான். [7]

குதிரைமலை கொங்குநாட்டில் உள்ள மலை பரணிடப்பட்டது 2011-08-31 at the வந்தவழி இயந்திரம்.

கேரள மாநில ஏழங்குளம் கிராம பஞ்சாயத்து வார்டுகளில் ஒன்று குதிரைமுகம் என்னும் வார்டு.

அடிக்குறிப்பு[தொகு]

  1. வெல்போர் வானவன் மறவன் நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும் பொய்யா வாய்வாட் புனைகழல் பிட்டன் மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன் - அகம் 143
  2. ஊராக் குதிரைக் கிழவ – புறம் 168
  3. நெடுநெறிக் குதிரைக் கூர்வேல் அஞ்சி – அகம் 372
  4. ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல் கூவிளங் கண்ணி கொடும்பூண் எழினி - புறம் 158
  5. தோட்டி போல் உருவம் கொண்ட மலை தொட்டபெட்டா
  6. கோடு உயர் நெடு வரைக் கவாஅன், பகலே, பாடு இன் அருவி ஆடுதல் இனிதே; (குறுந்தொகை 353)
  7. உருவக் குதிரை மழவர் ஓட்டிய முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி – அகம் 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிரைமலை&oldid=3851035" இலிருந்து மீள்விக்கப்பட்டது