எஸ். முத்துமீரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். முத்துமீரான்
பிறப்புநிந்தவூர், மட்டக்களப்பு
தேசியம்இலங்கை
அறியப்படுவதுசட்டத்தரணி,ஈழத்து எழுத்தாளர்

எஸ். முத்துமீரான் இலங்கையின் எழுத்தாளரும், கவிஞரும், நாட்டாரியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் ஆவார். கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை என்று இலக்கியத்தின் சகல துறைகளிலும் எழுதியவர். இலங்கை வானொலியில் தடாகங்கள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார்

எழுதிய நூல்கள்[தொகு]

  • கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவியமுதம்
  • கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்
  • இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பழமொழிகள்
  • இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் தாலாட்டுப் பாடல்கள்
  • இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய் மொழிக் கதைகள்
  • கிழக்கிலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பூர்வீகமும் – வாழ்வும் வாழ்வாதாரங்களும்

ஆகிய என்னும் ஆறு நாட்டார் இலக்கிய நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவற்றுடன் மூன்று சிறுகதைத் தொகுதிகளையும், மூன்று கவிதைத் தொகுதிகளையும், இரண்டு உருவகக்கதைத் தொகுதிகளையும், ஒரு நாடகத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார்.

விருதுகள்[தொகு]

  • இலக்கிய வேந்தன் - கலாச்சார அமைச்சு 2002
  • சாகித்திய பரிசு – வ.கி.கலாச்சார அமைச்சு 1994

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._முத்துமீரான்&oldid=3236614" இலிருந்து மீள்விக்கப்பட்டது