சி. எஸ். சேஷாத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. எஸ். சேஷாத்ரி ஒரு சிறந்த இந்திய கணிதவியலாளர் ஆவார். அல்ஜீப்ரா ஜியோமிதி ஆய்வில் ஈடுபட்டு வருபவர் ஆவார். சென்னை கணிதவியல் கழகத்தின் இயக்குனர். இவ்வாய்வகம் தொடங்கப்படுவதற்கு அவரே காரணமாகவும் இருந்தவர். இயற்கணித வடிவவியலில் பல ஆய்வுக்கட்டுரைகள் படைத்திருக்கிறார். அவர் பெயரில் கணிதத்தில் சேஷாத்ரி மாறிலி என்ற ஒரு நிலைப்பி உள்ளது.

கல்வி[தொகு]

காஞ்சிபுறத்தில் பிறந்தவரான இவர் படித்தது செங்கல்பட்டு செயிண்ட் ஜோசப் பள்ளி,[1] சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ.ஹானர்ஸ் பட்டமும், மும்பையிலுள்ள டாட்டா அடிப்படை ஆய்வகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

தொழில்[தொகு]

  • 1953 இலிருந்து 1984 வரையில் டாட்டா அடிப்படை ஆய்வகத்திலும்,
  • 1984 இலிருந்து 1989 வரையில் சென்னையில் கணித ஆய்வகத்திலும்,
  • 1989 இலிருந்து சென்னை கணித ஆய்வகத்தின் இயக்குனராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

சிறப்பழைப்புப் (வருகைப்) பேராசிரியர்[தொகு]

விருதுகளும் பரிசுகளும்[தொகு]

  • சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது.
  • ஸ்ரீனிவாஸ ராமனுசன் மெடல் (இந்தியன் அறிவியல் அகடெமி)
  • பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
  • ராயல் சொஸைட்டி ஃபெல்லோ
  • இந்தியன் அறிவியல் அகடெமி ஃபெல்லோ
  • இந்திய தேசீய அறிவியல் அகடெமி ஃபெல்லோ

மேற்கோள்கள்[தொகு]

  1. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்102

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._எஸ்._சேஷாத்ரி&oldid=3243844" இலிருந்து மீள்விக்கப்பட்டது