சைவ தத்துவங்கள்
சைவ தத்துவங்கள் எண்ணும் எழுத்தும் குறிப்பவை:
ஒன்று[தொகு]
- ஆண்டவன்
- அறிவு
- முக்தி
இரண்டு[தொகு]
- இரு செல்வங்கள் - கல்வி, பொருள்
- இரு அறங்கள் - இல்லறம், துறவறம்
- இரு தோற்றங்கள் - சரம், அசரம்
- இரு வினைகள் - நல்வினை, தீவினை
- இரு பிறப்புக்கள் - இம்மை, மறுமை
மூன்று[தொகு]
- மூன்று புரம் - பொன்மதில், வெள்ளி மதில், இருப்பு மதில்
- மூன்று பலை(காய்) - கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்
- மூன்று (திரி)கடுகம்(மருந்து) - சுக்கு, மிளகு, திப்பிலி
- மூன்று தானம் - உத்தம தானம், மத்திம தானம் ,அதம தானம்
- மூன்று குணம் - சாத்துவீக குணம், இராச(ச) குணம், தாமத குணம்
- மூன்று உயிர்த்தீ - உதராக்கினி, காமாக்கினி, கோபாக்கினி.
- மூன்று மொழிகள் - பழித்தல், புகழ்தல், மெய்கூறல்.
- மூன்று சுடர்கள் - சூரியன், சந்திரன், அக்கினி.
- மூன்று குற்றங்கள் - காமம், வெகுளி, மயக்கம்.
- மூன்று உலகங்கள் - பூமி, அந்தரம், சுவர்க்கம்.
- மூன்று தொழில்கள் - படைத்தல், காத்தல், அழித்தல்.
- மூன்று காலங்கள் - இறந்த காலம், எதிர் காலம், நிகழ் காலம்.
- மூன்று பொறிகள் - வாக்கு, காயம், மனம்.
- மூன்று பிறப்புக்கள் - உம்மை, இம்மை, மறுமை.
- மூன்று பாவபுண்ணிய பழக்கங்கள் - செய்தல், செய்வித்தல், உடன்படல்.
- மூன்று நாடிகள் - வாத நாடி, பித்த நாடி, சிலேத்துமம். நாடி
நான்கு[தொகு]
- நான்கு உபாயங்கள் - சாமம், பேதம், தானம், தண்டம்.
- நான்கு புண்ணிய தோற்றங்கள் - தவம், ஒழுக்கம், கொடை, கல்வி.
- பெண்டிர் குணம் நான்கு - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு.
- ஆடவர் குணம் நான்கு - அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி
- நான்கு இழிச்சொல் - குறளை, பொய், கடுஞ்சொல், பயனிலசொலல்.
- நாற் கதி - தேவர், மானுடர், விலங்கு, நரகர்.
ஐந்து[தொகு]
- ஐந்து துரக கதி - மல்லகதி, மயூரகதி, வானரகதி, வல்லியகதி, சரகதி.
- ஐந்து உணவு - கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், சுவைத்தல்.
- ஐம் பூதங்கள் - நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம்.
- ஐந்து வேள்விகள் - தேவயாகம், பிரமயாகம், பூதயாகம், பிதிர்யாகம், மானுடயாகம்.
- ஐந்து தொழில்கள்(இறைவன்) - படைத்தல், காத்தல், அழித்தல்., மறைத்தல், அருளல்
- ஐந்து அவத்தைகள் - சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்.
- ஐந்து வினாக்கள் - அறியான் வினாவல், அறிவொப்புக்காண்டல்,
- ஐயந்தீர்தல், அவனறிவுதான் கோடல், மெய்யவற்குக் காட்டல்.
- ஐந்து கர்ம இந்திரியங்கள் - வாக்கு, பாணி, பாதம், பாயுரு, உபத்(ஸ்)தம்.
- ஐந்து கர்ம இந்திரிய விடயங்கள் - வசனம், கர்மம், கமனம், விசர்ச(ஜ)னம், ஆநந்தம்.
- ஐந்து ஞான இந்திரியங்கள் - துவக்கு, சட்சு(க்ஷு), சுரோத்திரம், சிகு(ஜிஹ்)வை, ஆக்கிராணம்.
- ஐந்து தன் மாத்திரைகள் - சப்த, பரிச, ரூப, ரச, கந்தம்.
- ஐந்து அந்தக் கரணங்கள் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம், உள்ளம்.
- ஐந்து வாயுக்கள் - பிராணண், அபானன், வியனன், உதானன், சமானன்.
- ஐந்து உப வயுக்கள் - நாகன், கூர்மன், கி(க்)ருகரன், தேவதத்தன், தநஞ்சயன்(தனஞ்சயன்).
- ஐந்து ஆச்ரயங்கள் - அமராச்சரயம், விபச(ஜ)னாச்ரயம், ச(ஜ)லாச்ரயம், மலாச்ரயம், சுக்கிலாச்ரயம்.
- ஐந்து கோசங்கள் - அன்னமயம், பிராணமயம், மனோமயம், விக்ஞானமயம், ஆநந்தமயம்.
ஐந்து வடிவங்களூம், திசைகளூம்[தொகு]
பெயர் | தொழில் | திசை | வடிவம் | நிறம் |
---|---|---|---|---|
சத்யோ ஜாதம் | படைத்தல் | மேற்கு | நிலம் | பால் நிறம்.. |
வாமதேவம் | காத்தல் | வடக்கு | நீர் | சிவப்பு நிறம் |
அகோரம் | அழித்தல் | தெற்கு | நெருப்பு | அஞ்சன (கறுப்பு) நிறம் |
தற்புருடம் | மறைத்தல் | கிழக்கு | காற்று | மஞ்சள் குங்கும நிறம் |
ஈசானம் | அருளல் | வடகிழக்கு | ஆகாயம் | படிக நிறம். |
ஆறு[தொகு]
- ஆறு வேதாங்கங்கள் : சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதம், சோதிடம்.
- ஆறு உட்பகைகள் : அவா, வெகுளி, இவறல், மயக்கம், செருக்கு, பொறாமை(காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்.)
- ஆறு புறச்சமயங்கள் : உலோகாதயம், பௌத்தம், ஆருகதம், மீமாஞ்சம், மாயாவாதம், பாஞ்சராத்திரம்.
- ஆறு அகச்சமயங்கள் : சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம்.
ஏழு[தொகு]
- நாட்டுக்கு வரும் குற்றங்கள் ஏழு : விட்டில், தொட்டியர், பன்றி, கள்வர், அவமழை, யானை, கிளி.
- ஏழு முனிவர் : அகத்தியன், புலத்தியன், அங்கிரா, கெளதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன்.
- ஏழு நரகம் : கூடசாலம், இரெளரவம், கும்பிபாகம், பூதி, அள்ளல், செந்து, மகாபூதி.
- ஏழு கீழுலகம் : அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதால(ள)ம்.
- ஏழு மேலுலகம் : பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்,மகாலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்.
- ஏழு கடல் : உப்புக்கடல், கறுப்பஞ்சாற்றுக் கடல், மதுக் கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற் கடல், சுத்த நீர்க் கடல்.
- ஏழு திரைகள் :
- கருப்பு - மாயா சக்தி
- நீலத்திரை - கிரியா சக்தி
- பச்சை - பரா சக்தி
- சிவப்பு – இச்சா சக்தி
- பொன்வண்ணம் - ஞான சக்தி
- வெண்மை - ஆதி சக்தி
- கலப்பு - சிற்சக்தி
- ஏழு பிறப்பு :
- ஐந்து மாதம் வரை – குழவிப் பருவம்.
- அவயவங்கள் உற்பத்திக் காலம்.
- பிண்டம் வெளிப்பட்ட காலம்.
- குழந்தைப் பருவம்.
- பாலப் பருவம்.
- குமரப் பருவம்.
- முதுமைப் பருவம்.
- இதில் சூட்சமப் பிறப்பு 7 :
- சாக்கிரம்
- சொப்பனம்,
- சுழுத்தி
- சாக்கிரத்தில் சொப்பனம்
- சாக்கிரத்தில்சுழுத்தி
- சொப்பனத்தில் சொப்பனம்
- சொப்பனத்தில் சுழுத்தி
- ஏழு தாதுக்கள் : இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலமாகிய விந்து.
எட்டு[தொகு]
- எட்டு சித்திகள் : அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்
- எட்டு யோகாங்கங்கள் : இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தியானம், தாரணை, சமாதி
- எட்டு தருமாங்கங்கள் : அறமையப் படாமை, விருப்பமின்மை, வெறுப்பின்மை, மயக்கமின்மை, பழியை நீக்கல், அழிந்தோரை நிலை நிறுத்தல், அறுசமயத்தோர்க்கு அன்பு, அறம் விளக்கல்.
- எட்டு மெய்ப்பரிசங்கள் : தட்டல், பற்றல், தடவல், தீண்டல், குத்தல், வெட்டல், கட்டல், ஊன்றல்.
- எட்டு உடற்குறைகள் : குறள், செவிடு, மூங்கை, கூன், மருள்(அலி), குருடு, மா(விலங்கு உறுப்புடையது), உறுப்பில்லாப் பிண்டம் (ஊனமுற்றது).
ஒன்பது[தொகு]
- ஒன்பது தாரணை : நாம தாரணை, மாயா தாரணை, வச்சிர தாரணை, சித்திர தாரணை, சத்த தாரணை, வத்து தாரணை, சதுரங்க தாரணை, செய்யுள் தாரணை, எண்பொருட்டாரணை(நினைவு,குறைவு ஆகிய).
- பெரியோருக்குச் செய்யும் புண்ணியம் ஒன்பது : எதிர்கொளல், பணிதல், ஆசனத்திருத்தல், கால் கழுவல், அருச்சித்தல், தூபங்காட்டல், தீபங்காட்டல், துதித்தல், அமுதூட்டல்.