பால போத இலக்கணம்
பால போத இலக்கணம் என்பது உரைநடையில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல். திருத்தணிகைக் கந்தப்பையர் குமாரராகிய விசாகப்பெருமாளையர் என்பவரால் இயற்றப்பட்டது.[1] [2] [3] இந்த நூல் 274 பக்கங்கள் கொண்டது. 419 தலைப்புகளில் தமிழ் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
எண்ணின் தமிழ்க் குறியீடு[தொகு]
இந்த நூல் அச்சேறிய காலத்தில் தமிழ் எண் குறியீடுகள் இருவேறு முறைகளில் பதிவேற்றப்பட்டுள்ளன. 10, 100 ஆகிய எண்களுக்கு ஒற்றைக் குறியீட்டு எண்ணைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததை இலக்கணச் செய்தித்தலைப்புக்குத் தரப்படுள்ள.
வடமொழி எழுத்துக் குறியீடு[தொகு]
படத்தில் தமிழர் பயன்படுத்திய வடமொழி எழுத்துக்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய செய்தி மேலும் தெரியவில்லை.
நூல் தரும் குறிப்பு[தொகு]
பகுப்பு[தொகு]
- எழுத்து அதிகாரம்
- சொல் அதிகாரம்
- பெயர்ச்சொல்லியல்
- வினைச்சொல்லியல்
- இடைச்சொல்லியல்
- உரிச்சொல்லியல்
- புணர்ச்சி அதிகாரம்
- உயிர் ஈற்றுப் புணரியல்
- மெய் ஈற்றுப் புணரியல்
- பொதுப் புணரியல்
- வடவெழுத்துப்புணரியல்
- தொடர்மொழி அதிகாரம்
- தொகைநிலைத் தொடரியல்
- தொகாநிலைத் தொடரியல்
- பிரயோக-இயல்
- ஒழிபு-இயல்
விசாகப்பெருமாளய்யர் இயற்றிய பிற நூல்கள்[தொகு]
- யாப்பிலக்கணம்
- அணியிலக்கணம்
- நன்னூல் காண்டிகையுரை
- திருக்கோவையார் உரை
- திருவள்ளுவ மாலை உரை
மேற்கோள்[தொகு]
- ↑ திருத்தணிகை விசாகப் பெருமாளையர்
- ↑ விசாகப்பெருமாளையர், பால போத இலக்கணம், பக்கம் 274
- ↑ உ வே சாமிநாதையர் எழுதிய என் சரிதம்