தௌசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தௌசா, இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் கிழக்கில் அமைந்த தௌசா மாவட்டம் மற்றும் தௌசா வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சியும் ஆகும். இது மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூர் நகரத்திற்கு கிழக்கே 59 கிலோ மீட்டர் தொலைவிலும், புது தில்லிக்கு தென்மேற்கே 271.2 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்திற்கு அருகே சாந்த் பௌரி எனும் புகழ்பெற்ற படிக்கிணறு உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 35 வார்டுகளும், 15,465 வீடுகளும் கொண்ட தௌசா நகரத்தின் மக்கள் தொகை 85,960 ஆகும். அதில் ஆண்கள் 45,369 மற்றும் பெண்கள் 40,591 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 895 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 82% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 15,589 மற்றும் 8,048 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 84.69, இசுலாமியர் 14.11%, பௌத்தர்கள் , சமணர்கள் 0.66%, சீக்கியர்கள் 0.15%, கிறித்தவர்கள் 0.16% மற்றும் பிறர் 0.23% ஆகவுள்ளனர்.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தௌசா&oldid=3618050" இலிருந்து மீள்விக்கப்பட்டது