அவர்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அவர்கா என்பது செங்கிஸ் கான் சுர்கின் இனத்தவரிடம் இருந்து நிலப் பகுதியைக் கைப்பற்றிய பிறகு, மங்கோலியப் பேரரசின் முதல் நாடோடித் தலைநகரம் அமைக்கப்பட்ட புல்வெளி ஆகும். மங்கோலியாவின் தற்போதைய கென்டீ மாகாணத்தில் கெர்லென் மற்றும் திசங்கர் ஆறுகள் இணையும் இடத்தில் அவர்கா அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

இந்த இடமானது உண்மையில் அவுரக் என்று அழைக்கப்பட்டது. அவுரக் என்ற மங்கோலியச் சொல்லின் பொருள் ஆதாரம் என்பதாகும்.[1] செங்கிஸ் கானின் குடும்பம் வாழ்ந்த இடத்துக்கு அருகில் அவர்கா அமைந்திருந்தது. வாய் மொழிப் பாரம்பரியங்களின் படி, மங்கோலியர்கள் குவாரசமிய மீது படையெடுத்த போது போர்ட்டேயும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் அவர்காவில் தொடர்ந்து வாழ்ந்து வந்தனர். பேரரசு முழுவதிலுமிருந்து வந்த பண்டங்களைச் சேகரிப்பதற்கும் பிரித்தளிப்பதற்குமான ஒரு மையமாக அவர்கா திகழ்ந்தது. எனினும் சீக்கிரமே இந்நகரம் மிகச் சிறியது என்று உணரப்பட்டது. பிறகு மங்கோலிய அவையானது கரகோரத்தின் அடித்தளத்தை நிறுவியது.

குப்லாய் கான் மற்றும் அவருக்குப் பின் வந்தவர்களின் ஆட்சியின் போது செங்கிஸ் கான் வழிபாட்டு முறையின் சன்னிதியாக இந்த இடம் உருவானது.

கரிமக் கதிர்வீச்சை அடிப்படையாக கொண்ட 2020ஆம் ஆண்டு ஆய்வின்படி அவர்காவானது செங்கிஸ் கானின் குளிர்கால முகாமின் அடித்தளம் என முடிவுக்கு வரப்பட்டது.[2]

உசாத்துணை[தொகு]

  1. John Man Genghis Khan, p.29
  2. Jack N. Fenner. "Stable isotope and radiocarbon analyses of livestock from the Mongol Empire site of Avarga, Mongolia". 22. ScienceDirect. doi:10.1016/j.ara.2020.100181. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவர்கா&oldid=3490686" இலிருந்து மீள்விக்கப்பட்டது