மருடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருடி நகரம்
Marudi Town
சரவாக்
மருடி நகரம் is located in மலேசியா
மருடி நகரம்
மருடி நகரம்
ஆள்கூறுகள்: 4°11′0″N 114°19′0″E / 4.18333°N 114.31667°E / 4.18333; 114.31667
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவு மிரி பிரிவு
மாவட்டம்மருடி மாவட்டம்
அரசு
 • மாவட்ட அதிகாரிமார்க்கஸ் சிபோங்
Markus Sibong
பரப்பளவு
 • மொத்தம்21,634.0 km2 (8,518 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்90,100
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
மலேசிய அஞ்சல் குறியீடு9805x
மலேசியத் தொலைபேசி எண்கள்085 (landline only)
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்QM; HQ
இணையதளம்www.marudidc.org

மருடி (மலாய் மொழி: Marudi; ஆங்கிலம்: Marudi; சீனம்: 马鲁帝) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் மிரி பிரிவு, மிரி மாவட்டத்தில் உள்ள நகரமாகும்.

இந்த நகரம் பாராம் ஆற்றின் (Baram River) கரையில், ஆற்றின் முகப்பில் இருந்து 100 கி.மீ. (62 மைல்) உட்பாகத்தில் உள்ளது. மிரி நிறுவப் படுவதற்கு முன்பு, மருடி நகரம், சரவாக் மாநிலத்தின் வடக்குப் பகுதியின் நிர்வாக மையமாக இருந்தது.

யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமான குனோங் முலு தேசிய பூங்காவிற்கு (Gunung Mulu National Park) நுழைவாயில் நகரமாகவும் விளங்குகிறது.

வரலாறு[தொகு]

சார்லஸ் ஹோஸ்

1868-ஆம் ஆண்டில் ஜேம்ஸ் புரூக்கிற்கு (James Brooke) பிறகு சார்லஸ் புரூக் (Charles Brooke) என்பவர் சரவாக்கின் புதிய ராஜாவாகப் பதவியேற்றார்.

1883 வாக்கில், புரூணையின் சுல்தான் அப்போதைய சுல்தான் அப்துல் மோமின் (Abdul Momin) என்பவர், மிரி உட்பட பாரம் பகுதியை சார்லஸ் புரூக்கிற்குக் கொடுத்து விட்டார். அந்தக் காலக் கட்டத்தில் சரவாக் மாநிலம் முழுமைக்கும் புரூணை சுல்தானகத்தின் ஆளுமையின் கீழ் இருந்தது.[1]

மருடியில் ஒரு கோட்டை[தொகு]

சரவாக்கின் நான்காவது பிரிவு உடனடியாக உருவாக்கப்பட்டது. அதற்கு மாமெர்தோ ஜார்ஜ் குரிட்ஸ் (Mamerto George Gueritz) என்பவர் முதல் ஆளுநராக (Resident of the Division) பதவியில் அமர்த்தப் பட்டார்.

1883-இல் மிரிக்கு கிழக்கே 43 கி.மீ. தொலைவில் உள்ள மருடியில் ஒரு கோட்டை கட்டப்பட்டது.[2] அதற்கு கிளாட் டவுன் (Claudetown) என்று பெயரிடப்பட்டது. 1884-இல், அது நான்காம் பிரிவின் நிர்வாக மையமாக மாறியது.

புதிய நிர்வாகத்திற்கு இரண்டு இளம் அதிகாரிகள்; 30 புரவிப்படை வீரர்கள்; மற்றும் ஒரு சில பூர்வீகக் காவலர்கள் உதவினார்கள்.[3]

1891-ஆம் ஆண்டில் சார்லஸ் ஹோஸ் (Charles Hose) என்பவர் பாராம் மாவட்டத்தின் (Resident of Baram District) ஆளுநர் ஆனார். மருடியில் இருந்த கோட்டை, ஹோஸ் கோட்டை (Fort Hose) என மறுபெயரிடப்பட்டது.

மருடி காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருடி&oldid=3645002" இலிருந்து மீள்விக்கப்பட்டது