இராஜாராம் சாசுதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜா இராம் சாசுதிரி (Rajaram Shastri)(இராஜாராம் சாசுதிரி ) (4 ஜூன் 1904 - 21 ஆகஸ்ட் 1991) என்பவர் இந்தியக் கல்வியாளர் ஆவார். இவர் 1971 இந்திய பொதுத் தேர்தலில் 5வது மக்களவைக்கு உத்தரப் பிரதேசம் வாரணாசியிலிருந்து இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1964 முதல் 1971 வரை மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் பேராசிரியராகவும், பின்னர் துணைவேந்தராகவும் இருந்தார். இவர் ராய் பகதூர் தாக்கூர் ஜெய்ஸ்வாலின் பேரன் ஆவார்.

இவர் தொழிலாளர் தேசிய ஆணையத்தின் முதல் உறுப்பினராக பணியாற்றினார்.[1] இந்திய அரசு இவருக்கு இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் விருதினை1991-ல்[2] வழங்கியது.

இவர் 1991 ஆகத்து 21ம் நாளன்று புது தில்லியில் தனது 87ஆவது அகவையில் இறந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "IASIndia.org". www.iasindia.org. Archived from the original on 2021-01-21. பார்க்கப்பட்ட நாள் 2021-11-11.
  2. "Padma Vibhushan Awardees". Ministry of Communications and Information Technology. பார்க்கப்பட்ட நாள் 2009-06-28.
  3. "Obituary".

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜாராம்_சாசுதிரி&oldid=3544245" இலிருந்து மீள்விக்கப்பட்டது