அல்போன்சு டி லாமார்ட்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்போன்சு டி லாமார்ட்டின்
பிறப்புAlphonse Marie Louis de Prat de Lamartine
21 அக்டோபர் 1790
Mâcon
இறப்பு28 பெப்பிரவரி 1869 (அகவை 78)
பாரிசு
பணிஅரசியல்வாதி, கவிஞர், எழுத்தாளர், வரலாற்றாளர், foreign minister, prose writer
சிறப்புப் பணிகள்Graziella, Harmonies poetiques et religieuses, Le Lac, Le Vallon, Poetical Meditations, Q16642011Kategori:Articles without Wikidata information, Q19222995Kategori:Articles without Wikidata information, Q19226770Kategori:Articles without Wikidata information, Q21686605Kategori:Articles without Wikidata information, Q3210840Kategori:Articles without Wikidata information, Q3345253Kategori:Articles without Wikidata information, Voyage en Orient
பாணிகவிதை, புதினம்
குழந்தைகள்Alphonse de Lamartine, Julia de Lamartine
விருதுகள்Commander of the Order of Saint Joseph, Knight of the Legion of Honour
கையெழுத்து
அல்போன்சு டி லாமார்ட்டின்
1865 இல் லாமார்ட்டின்

அல்போன்சு டி லாமார்ட்டின் (Alphonse de Lamartine, அக்டோபர் 21, 1790 - பிப்ரவரி 28, 1869) ஒரு பிரெஞ்சு எழுத்தாளர் ஆவார். கவிஞர், அரசியல்வாதி என பலமுகங்கள் கொண்ட இவர் 19 ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியராக கணிக்கப்படுகிறார். கவிஞராகவும், எழுத்தாளராகவும் மிளிர்ந்த இவர் பிரான்சின் வெளியுறவு அமைச்சராகவும் 1848 லிருந்து சில காலம் சேவையாற்றியுள்ளார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

தொடக்க ஆண்டுகள்[தொகு]

லாமார்டன் பர்கண்டியிலுள்ள மேகோனில் 1790 ஆம் ஆண்டு அக்டோபர் 21 இல் பிறந்தார் [1] பிரெஞ்சு மாகாண பிரபுக்களின் உறுப்பினர்களாக அவருடைய குடும்பத்தினர் இருந்தனர், மேலும் அவர் தனது இளமைப் பருவத்தை குடும்ப உறுப்பினர்களுடன் கழித்தார். லாமார்ட்டின் எழுதிய லே லாக் என்ற ஓரளவுக்கு அவரது சுயசரிதை போன்ற கவிதை மிகவும் புகழ் பெற்ற கவிதையாகும். இழப்புக்கு ஆளான ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில் ஒரு தம்பதியினரின் உணர்ச்சிப்பூர்வமான காதலை பின்னோக்காக அவர்களால் பகிர்ந்து கொள்ளப்படுவதை இக்கவிதை விவரிக்கிறது. பிரஞ்சு கவிதை வடிவங்களைப் பயன்படுத்துவதில் லாமர்டின் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார். கத்தோலிக்க மதத்தை வளர்த்தவராகவும் பன்முகம் கொண்டவராகவும் லாமர்டினின் நூல்கள் அவரைப்பற்றி தெரிவித்தன.

1820 ஆம் ஆண்டில் லாமார்ட்டின் எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பு அவரை ஒரு தலைசிறந்த கவிஞராக அறிமுகப்படுத்தியது [2]. அவர் 1825 ஆம் ஆண்டில் உயரிய விருதான செவாலியே விருதை இவர் பெற்றார். 1825 முதல் 1828 வரை இத்தாலியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்காகவும் அவர் பணியாற்றினார். 1829 ஆம் ஆண்டில் லாமார்ட்டின் பிரஞ்சு அகாதெமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1833 ஆம் ஆண்டில் ஒரு துணைத் தலைவராகவும் பணியாற்றினார். 1835 ஆம் ஆண்டில் ஒரு பயணநூலையும் வெளியிட்டு புகழ்பெற்றார். இச்சமயத்தில் அவர் தன்னுடைய ஒரே மகளை இழக்க நேர்ந்தது.

அரசியல் வாழ்க்கை[தொகு]

பிப்ரவரி புரட்சி எனப்படும் 1848 ஆம் ஆண்டின் பிரஞ்சுப் புரட்சிக் காலத்தில் லாமார்ட்டின் அரசாங்கத்தின் பொறுப்பாளராக இருந்தார். 24 பிப்ரவரி 1848 முதல் 11 மே 1848 வரை அவர் வெளியுறவு அமைச்சராக பதவிவகித்தார். இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக இருந்த யாக்-சார்லசு டுபோன்ட் டி லா யூர் அவரது மகத்தான வயது காரணமாக தனது பணிகள் பலவற்றை பிரதிநிதி லாமார்ட்டினுக்கு வழங்கினார். பிரான்சு நாட்டின் இணை தலைமை அமைப்பாக இருந்த நிர்வாக ஆணையத்தில் உறுப்பினராகவும் இருந்தார்.

பிரான்சு நாட்டின் இரண்டாவது குடியரசினை நிறுவுதலுக்கு லாமார்ட்டின் ஒரு கருவியாக இருந்தார். நாட்டின் தற்காலிக அரசாங்கத்தை உருவாக்கி ஏற்றுக்கொள்வதற்காக டி வில்லி உணவு விடுதியில் குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பத்திரிகையாளர்களை லாமார்ட்டின் சந்தித்தார். குடியரசுக் கட்சியை பாரம்பரிய வடிவத்தில் அறிவிக்க லாமார்ட்டின் அவ்விடுதியின் உப்பரிகையை தாமே தேர்ந்தெடுத்தார், மேலும் நாட்டின் தேசியக் கொடியாக மூவண்ணக் கொடியே தொடரும் எனவும் உறுதிசெய்தார்.

ஓர் அரசியல்வாதியாக இரண்டாவது குடியரசுக் காலத்தில் இவர் அடிமைத்தனத்தையும் மரண தண்டனையையும் அகற்றுவதற்கு உச்சக்கட்ட முயற்சிகளை மேற்கொண்டார். அதேபோல் வேலை செய்வதற்கான உரிமையையும், குறுகிய கால தேசிய பட்டறைத் திட்டங்களையும் நிறைவேற்றினார்.

சனநாயகம் மற்றும் சமாதானத்தை ஆதரித்த ஒரு அரசியல் கோட்பாட்டாளராக பெரும்பாலான பிரச்சினைகள் குறித்த இவரது மிதவாத நிலைப்பாடு அவரது சீடர்கள் பலரை கைவிடச் செய்தது. டிசம்பர் 10, 1848 இல் நடைபெற்ற குடியரசுத்தலைவர் தேர்தலில் தோல்வியுற்றார். வேட்பாளராக இவர் 19,000 வாக்குகளுக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றார். இதனால் அவர் அரசியலில் இருந்து விலகி இலக்கியத்திற்கு தன்னை அர்ப்பணித்தார்.

இறுதிக் காலம்[தொகு]

குறிப்பாக பேரரசுக் காலத்தில் வரலாறு, விமர்சனம், தன்னம்பிக்கை, இலக்கிய உரையாடல்கள் போன்ற மாறுபட்ட பாடங்களில் நூல்களை வெளியிட்டார். ஓய்வுக்குப் பின்னரான தனது சொந்த வாழ்க்கையில் கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க இயலாமல் வறுமையில் வாடினார். அவர் 1869 ஆம் ஆண்டு பாரிசில் இறந்தார்.

லாமார்ட்டினை முதலாவது காதல் கவிஞர் என்று கருதுகிறார்கள். லெபனான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் மொழிகளைக் கற்றவர் என்ற பெருமையும் லாமார்ட்டினுக்கு உண்டு. இதற்காக இவர் லெபனான், சிரியா பெய்ரூட் போன்ற நாடுகளுக்கு பயணம் சென்றார். 1832 ஆம் ஆண்டு டிசம்பர் 7 அன்று இவர் பெய்ரூட்டில் இருந்தபோது தனது கடைசி மகளையும் இழந்தார். லெபனானின் பயணத்தின்போது லாமார்ட்டின் இளவரசர் இரண்டாம் பசீர் சிகாப் மற்றும் இளவரசர் சைமன் கரம் ஆகியோரை சந்தித்தார். அவர்கள் கவிதை ஆர்வலர்கள் ஆவார். லெபனானில் உள்ள ஒரு பள்ளத்தாக்கு இன்னமும் இவர் வருகையின் நினைவாக லாமார்ட்டின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது,

மேற்கோள்கள்[தொகு]

  1. Whitehouse, Henry Remsen (1918). The Life of Lamartine, Volume 1. BiblioBazaar (2009). பக். 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-115-29659-5. https://books.google.com/books?id=vHAGAQAAIAAJ&ots=Q6mnBYTnOH&dq=life%20of%20lamartine&pg=PP9#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 14 November 2010. 
  2. Catholic Online. "Alphonse de Lamartine - Catholic Encyclopedia - Catholic Online". Catholic.org. பார்க்கப்பட்ட நாள் 2016-04-21.

புற இணைப்புகள்[தொகு]