இ. எஸ். ஏரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இ. எஸ். ஏரியல் (ஆங்கிலம்: E. S. Ariel) என்பவர் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் ஆவார். அவரது சமகாலத்தவரால் மாசியு ஏரியல் (பிரெஞ்சு: "திரு. ஏரியல்") என்று குறிப்பிடப்படும் இவர், பண்டைய இந்திய தத்துவ நூலான திருக்குறளைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்ப்பு செய்தமைக்காக அறியப்படுபவர். இவர் 1848-இல் திருக்குறளின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில குறட்பாக்களைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து பாரிசில் குறள் டி திருவள்ளுவர் (Kural de Thiruvalluvar (Traduits du Tamoul)) என்ற பெயரில் வெளியிட்டார்.[1] இவருக்கு முன்னரே குறளின் முதல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு 1767-இல் பெயர் அறியப்படாத ஒரு அறிஞரால் செய்யப்பட்டது என்று ஏரியல் தனது நூலில் குறிப்பிட்டிருந்தாலும், ஏரியலின் மொழிபெயர்ப்புதான் குறளைப் பிரெஞ்சு மக்களுக்குக் கொண்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.[2][3]

குறளைப் பற்றிய கருத்து[தொகு]

பர்னூஃப் என்பவருக்கு ஏரியல் எழுதிய கடிதமொன்று ஜர்னல் ஆசியடிக் (நவம்பர்–டிசம்பர் 1848) இதழில் வெளியிடப்பட்டது. அதில் ஏரியல் குறளைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்:

திருக்குறளைப் பற்றிக் கூறுகையில் ஏரியல் அதனை "பெயரறியா ஆசிரியரால் இயற்றப்பட்ட பெயரறியா நூல்" ("Ce livre sans no, par un auteur sans nom") என்று பாராட்டியுள்ளார்.[4]

மேற்கோள் தரவுகள்[தொகு]

  1. Sanjeevi, N. (1973). Bibliography on Tirukkural. In First All India Tirukkural Seminar Papers. Chennai: University of Madras. பக். 146. 
  2. 2.0 2.1 Ramasamy, V. (2001). On Translating Tirukkural (First ). Chennai: International Institute of Tamil Studies. பக். 30–31. 
  3. Rajaram, M. (2015). Glory of Thirukkural. 915 (1 ). Chennai: International Institute of Tamil Studies. பக். 84–85. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-85165-95-5. 
  4. 4.0 4.1 Pope, G. U. (1886). The Sacred Kurral of Tiruvalluva Nayanar. New Delhi: Asian Educational Services. பக். i (Introduction). https://archive.org/details/in.ernet.dli.2015.43871. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._எஸ்._ஏரியல்&oldid=3649283" இலிருந்து மீள்விக்கப்பட்டது