திருவண்ணாமலை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவண்ணாமலை வட்டம் , தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக திருவண்ணாமலை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 135 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2] 2015-இல் இவ்வட்டத்தின் சிலபகுதிகளைக் கொண்டு கீழ்பெண்ணாத்தூர் வட்டம் நிறுவப்பட்டது.

இவ்வட்டத்தில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் மற்றும் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

திருவண்ணாமலை வட்டத்தில் 7 உள்வட்டங்கள் உள்ளன.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 4,09,826 ஆகும். அதில் 2,02,913 ஆண்களும், 2,06,913 பெண்களும் உள்ளனர். 134,338 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 66.9% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். [[1]] இவ்வட்டத்தின் எழுத்தறிவு 77.73% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 65485 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 923 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 125,656 மற்றும் 10,307 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 89.62% , இசுலாமியர்கள் 5.12%, கிறித்தவர்கள் 4.77%, சமணர்கள் 0..24% மற்றும் பிறர் 0.25% ஆகவுள்ளனர்.[3]

குறுவட்டங்கள்[தொகு]

திருவண்ணாமலை வட்டத்தில் நிர்வாக வசதிக்காக உள் வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவை : நாயுடு மங்கலம், திருவண்ணாமலை வடக்கு, துரிஞ்சாபுரம், தச்சம்பட்டு, திருவண்ணாமலை தெற்கு ஆகிய உள்வட்டங்கள் திருவண்ணாமலை வட்டத்தில் அமைந்துள்ளது.[[தொடர்பிழந்த இணைப்பு]]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவண்ணாமலை_வட்டம்&oldid=3216544" இலிருந்து மீள்விக்கப்பட்டது