சுதர்மசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:Use Indian English

வார்ப்புரு:Infobox deity/Wikidata

சுதர்மசுவாமி (சமக்கிருதம்: Sudharmāsvāmī அல்லது சுதர்மன்; பொ.ஊ.மு. 607 – 507) என்பவர் மகாவீரரின் ஐந்தாம் கணாதரர் ஆவார். அனைத்துச் சமண ஆச்சாரியர்களும் துறவிகளும் இவரது சட்டங்களையே பின்பற்றுகின்றனர்.

வாழ்க்கை[தொகு]

மகாவீரரால் மீள ஒழுங்கமைக்கப்பட்ட சமயப் பிரிவில் இந்திரபூதி கௌதமருக்குப் பின் சுதர்மசுவாமி தலைமைப் பொறுப்பேற்றார்.[1] இவரது வாழ்க்கைக் காலப்பகுதி மரபின் படி பொ.ஊ.மு. 607இலிருந்து 506 வரையாகும்.[2] சமண மரபின் படி, 12 ஆண்டுகளின் பின் பொ.ஊ.மு. 515இல் இவர் முற்றறிவு (கேவலஞானம்) பெற்றதாக நம்பப்படுகிறது.[1] இவர் பொ.ஊ.மு. 507ல், தனது 100வது அகவையில் நிர்வாணம் அடைந்ததாக நம்பப்படுகிறது.[1][3] இவருக்குப் பின், இச் சமயப்பிரிவின் தலைமை சம்புசுவாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்புசுவாமி 44 ஆண்டுகள் பதவி வகித்ததோடு, மகாவீரரின் இறப்புக்குப் பின் இருந்த இறுதி கணாதரரும் ஆவார்.[1]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Natubhai Shah 2004, ப. 39.
  2. Natubhai Shah 2004, ப. 41.
  3. George 2008, ப. 319.

மூலங்கள்[தொகு]

  • Dundas, Paul (2002) [1992], The Jains (Second ed.), Routledge, ISBN 0-415-26605-X
  • George, Vensus A. (2008), Paths to the Divine: Ancient and Indian, vol. XII, The Council for Research in Values and Philosophy, ISBN 978-1-56518-248-6
  • Shah, Natubhai (2004) [First published in 1998], Jainism: The World of Conquerors, vol. I, Motilal Banarsidass, ISBN 978-81-208-1938-2

வார்ப்புரு:சமணத் துறவிகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதர்மசுவாமி&oldid=3270524" இலிருந்து மீள்விக்கப்பட்டது