திம்ம பூபாலன் மிகக் குறைந்த காலமே விஜயநகரப் பேரரசின் அரசனாக இருந்தவன். விஜயநகரத்தின் சாளுவ மரபைத் தோற்றுவித்த சாளுவ நரசிம்ம தேவ ராயனின் மகனான இவன் தனது தந்தை இறந்ததும் 1491 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தான். நாட்டில் பெரும் அரசியல் குழப்பங்கள் மிகுந்திருந்த இக் காலத்தில், தளபதி ஒருவனால் குறுகிய காலத்திலேயே கொல்லப்பட்டான். [1]இவனைத் தொடர்ந்து முடி சூட்டப்பட்டவன் இவனது இளவயதுத் தம்பியாகியஇரண்டாம் நரசிம்ம ராயன் ஆவான்.