முக்குடிவேலம்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முக்குடிவேலம்பாளையம் (MUKKUDI VELAM PALAYAM) மூன்று குடி கொண்ட வேளாண்மை இனத்தவர்கள் வாழ்ந்து வரும் ஓர் சிற்றூர் ஆகும். இவ்வூர் பாசூர் பேரூராட்சியில் உள்ளது. இந்துக்கள் மட்டும் வாழும் இவ்வூரில் உள்ள அனைவரும் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர், பாசூரில் உள்ள மகா மாரியம்மன், குலவிளக்கு அம்மன், சங்கலி கருப்பண்ண சாமி மற்றும் ஈஸ்வரன் கோவில்களுக்கு செல்ல முக்குடிவேலம்பாளையத்தில் இருந்தே செல்ல வேண்டும்.

பாசூர் ஈரோட்டிலிருந்து 19 கிமீ தொலைவிலும் கொடுமுடியில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பாசூரில் ஒரு தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. முக்குடிவேலம்பாளையத்துக்கு செல்ல ஈரோட்டிலிருந்து தொடருந்து, பேருந்து எண் 30,6A ஆகியவைகளும், கரூரிலிருந்து K2உம் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்குடிவேலம்பாளையம்&oldid=3856647" இலிருந்து மீள்விக்கப்பட்டது