காங்கேயம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காங்கேயம் வட்டம் (Kangeyam taluk) தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். இது தாராபுரம் வட்டத்தில் இருந்தது பிரிக்கப்பட்டு தனி வட்டமாக உருவாக்கப்பட்டது. காங்கேயம் வட்டம் தாராபுரம் வருவாய் கோட்டத்தின் கீழ் வரும். [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக காங்கேயம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 4 உள்வட்டங்களும், 44 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2] இவ்வட்டத்தில் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 209,385 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 104,751 ஆண்களும், 104,634 பெண்களும் உள்ளனர். 64,069 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் 59.1% வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 73.47% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 16257 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 917 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 41,090 மற்றும் 111 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.99%, இசுலாமியர்கள் 1.3% , கிறித்தவர்கள் 2.01% மற்றும் பிறர் 0.69% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்கேயம்_வட்டம்&oldid=3302369" இலிருந்து மீள்விக்கப்பட்டது