1959 திபெத்தியக் கிளர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1959 திபெத்தியக் கிளர்ச்சி
பனிப்போர் பகுதி

கிளர்ச்சியின் போது திபெத்தியப் படைத்தலைவர் சரோங் மற்றும் திபெத்திய பௌத்த பௌத்த பிக்குகளை, சீன இராணுவத்தால் கைதி செய்யப்படல்.
நாள் 10–23 மார்ச் 1959[1]
இடம் லாசா, சீனாவின் திபெத் நிர்வாகப் பகுதி
சீனர்களுக்கு வெற்றி
பிரிவினர்
திபெத்தியர்கள், காம் மாகாண காம்பா கிளர்ச்சியாளர்கள் மற்றும் போராளிகள்

கிழக்கு திபெத்தில் கிளர்ச்சி:
சூசி காங்துருக்
ஆதரவாளர்கள்:
 ஐக்கிய அமெரிக்கா[2]
 இந்தியா[3]
 சீனக் குடியரசு[4][5]

சீன மக்கள் குடியரசு
தளபதிகள், தலைவர்கள்
பல்வேறு சீன எதிர்ப்புத் தலைவர்கள் [6] ஜெனரல் தான் குவான்சான் [7]
இழப்புகள்
காயமுற்றோர் 85,000–87,000 [8] [9][10] 2,000 கொல்லப்பட்டனர்

1959 சீனாவிற்கு எதிரான திபெத்தியர்களின் கிளர்ச்சி (1959 Tibetan uprising or the 1959 Tibetan rebellion) 1951-இல் திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்த பின்னர்[11], திபெத் நாடானது, 1955-இல் சீனாவின் ஒரு நிர்வாகப் பகுதியாக மாற்றப்பட்டது. இதனை திபெத்திய மக்கள் ஏற்காது தொடர்ந்து அமைதியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் திபெத்திய பௌத்த சமயத் தலைவரான 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோவை சீன அரசு கைது செய்து விடுவார்களோ எனற அச்சத்தின் காரணமான, 10 மார்ச் 1959 அன்று திபெத்தின் தலைநகரான லாசாவில் சீன அரசுக்கு எதிரராக திபெத்திய போராளிகள், பௌத்த பிக்குகள், திபெத்திற்கு கிழக்கில் உள்ள காம் மாகாண காம்பா மக்கள், திபெத்தை தனி நாடாக அறிவிக்க கோரி கிளர்ச்சிகளை தொடங்கினர்.[12][13]ஆனால் ஜெனரல் தான் குவான்சான் தலைமையிலான சீன இராணுவத்தினர் 23 மார்ச் 1959 அன்று சீனாவிற்கு திபெத்தியர்களின் கிளர்ச்சியை போரிட்டு ஒடுக்கினர். இந்த கிளர்ச்சியில் 2,000 திபெத்தியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 85 ஆயிரம் முதல் 87 ஆயிரம் திபெத்தியர்கள் காயமடைந்தனர்.


1956-இல் இந்தியாவில் அடைக்கல் அடைந்த 14-வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ
கிளர்ச்சியின் இறுதியில் திபெத்தியப் போராளிகள், ஜோக்காங் விகாரையின் கூரை மீதேறி சீனத் துருப்புகளுக்கு எதிராக இயந்த்திரத் துப்பாக்கிகளால் சுடும் காட்சி [14]

கிளர்ச்சிக்குப் பின்னர்[தொகு]

திபெத்தின் தலைநகரான லாசா நகரத்தின் செரா விகாரை, கான்டென் விகாரை மற்றும் துரெப்ங் விகாரைகளை சீன இராணுவம் குண்டுகள் பொழிந்து பெரும் சேதம் உண்டாக்கினர். தலாய் லாமாவின் மெய்க்காவல் படையினரின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, பொது இடத்தில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. திபெத்தியர்களின் வீடுகளையும், பொது இடங்களையும் சீனப்படையினர் சோதனையிட்டு, ஆயுதங்களை பறித்தனர். ஆயிரக்கணக்கான திபெத்திய பௌத்தப் பிக்குகளை கைது செய்தனர். பலரை மரண தண்டனை விதித்தனர். லாசாவில் இருந்த விகாரை எனும் வழிபாட்டு கட்டிடங்களை கொள்ளையடித்து, அழித்தனர்.[9]

12 மார்ச் மாதத்திற்குப் பின்னர் திபெத்திய பெண்கள் சீன இராணுவத்திற்கு எதிராக போராட்டங்கள் மேற்கொண்டு கிளர்ச்சி செய்தனர். கிளர்ச்சி செய்த போராட்ட வீரகங்னைகளை சீன இராணுவம் கைது சிறையில் அடைத்தது. கைது செய்யப்பட்ட பெண்களை சீன இராணுவம் சிறையில் கொடுமைப்படுத்தினர். 12 பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சீனா அரசின் கட்டுப்பாட்டில் இருந்த திபெத் பகுதிக்கு, 1965-இல் திபெத் தன்னாட்சிப் பகுதி என்ற சலுகை வழங்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டு சீனாவிற்கு எதிரான திபெத்தியர்கள் நடத்திய கிளர்ச்சியை நினைவு கூறும் வகையில், திபெத்தியர்கள் வாழும் உலக நாடுகளில் ஆண்டுதோறும் மார்ச், 10 நாளான்று திபெத்தியர்கள் எழுச்சி நாள் மற்றும் 12 மார்ச் அன்று திபெத்தியப் பெண்களின் எழுச்சி நாளும் கொண்டாடப்படுகிறது. [15]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Van Schaik 2013, ப. 233, 236.
  2. "Status Report on Tibetan Operations". Office of the Historian. January 26, 1968.
  3. Salopek, Paul (January 26, 1997). "THE CIA'S SECRET WAR IN TIBET". Chicago Tribune. Chicago Tribune. https://www.chicagotribune.com/news/ct-xpm-1997-01-26-9701270002-story.html. 
  4. Conboy, Kenneth J.; Morrison, James; Morrison, James (2002). The CIA's Secret War in Tibet. Lawrence: University Press of Kansas இம் மூலத்தில் இருந்து 1 ஏப்ரல் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220401223055/https://kansaspress.ku.edu/978-0-7006-1788-3.html. பார்த்த நாள்: 11 December 2018. 
  5. "China/Tibet (1950–Present)". University of Central Arkansas .
  6. Van Schaik 2013, ப. 234.
  7. Van Schaik 2013, ப. 232, 235.
  8. Mackerras, Colin (1988). "Drama in the Tibetan Autonomous Region.". Asian Theatre Journal 5 (2): 198–219. 
  9. 9.0 9.1 Official Website of the Tibetan Government in Exile. History Leading up to March 10th 1959. 7 September 1998. Retrieved March 16, 2008.
  10. "Inside Story of CIA's Black Hands in Tibet. The American Spectator, December 1997". Archived from the original on 2011-07-19. பார்க்கப்பட்ட நாள் 2009-02-28.
  11. Chen Jian, The Tibetan Rebellion of 1959 and China's Changing Relations with India and the Soviet Union, Journal of Cold War Studies, Volume 8 Issue 3 Summer 2006, Cold War Studies at Harvard University.
  12. Li, Jianglin (2016-10-10) (in en). Tibet in Agony. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-674-97370-1. https://books.google.com/books?id=jq85DQAAQBAJ&q=xunhua+incident+Tibetan+uprising+precursor&pg=PP67. 
  13. Luo, Siling (2016-06-22). "西藏的秘密战争,究竟发生了什么?(下)". The New York Times (in சீனம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.
  14. Van Schaik 2013, ப. 236.
  15. Gyatso, His Holiness the 14th Dalai Lama, Tenzin (18 November 2011). "The Genesis Of The Tibetan Women's Struggle For Independence". tibetanwomen.org. Tibetan Women’s Association. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=1959_திபெத்தியக்_கிளர்ச்சி&oldid=3893897" இலிருந்து மீள்விக்கப்பட்டது