அபு சயித் பகதூர் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபு சயித் பகதூர் கான் (சூன் 2, 1305 – திசம்பர் 1, 1335) (பாரசீகம், அரபு மொழி: ابو سعید بہادر خان ) என்பவர் மங்கோலியப் பேரரசின் ஒரு பிரிவான ஈல்கானரசின் ஒன்பதாவது ஆட்சியாளர் ஆவார். இவர் அபு சயித் பகதூர் (மொங்கோலியம்: ᠪᠦᠰᠠᠢ ᠪᠠᠬᠠᠲᠦᠷ ᠬᠠᠨ, புசயித் பகதூர் கான், Бусайд баатар хаан / புசயித் பாதர் கான், நவீன மங்கோலியம்: ˈbusæt ˈbaːtər xaːŋ) என்றும் அழைக்கப்படுகிறார். இவரது அரசு தற்போதைய ஈரான், அசர்பைஜான், சியார்சியா மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகளையும், ஈராக்கு, துருக்கி, ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தான் ஆகிய நாடுகளின் பகுதிகளையும் உள்ளடக்கி இருந்தது.

ஆளுமை[தொகு]

இப்னு பதூதாவின் கூற்றுப்படி, "கடவுளின் படைப்புகளிலேயே மிகுந்த அழகுடையவர்களில் ஒருவராக" அபு சயித் இருந்தார். கலாச்சாரத்தின் மீது ஈடுபாடுடைய ஆட்சியாளரான இவர், கவிதை மற்றும் இசை ஆகிய இரண்டையுமே இயற்றிய ஒரே ஈல்கானாகத் திகழ்ந்தார்.[1]

உசாத்துணை[தொகு]

  1. "ABŪ SAʿĪD BAHĀDOR KHAN – Encyclopaedia Iranica". www.iranicaonline.org. பார்க்கப்பட்ட நாள் 2020-03-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபு_சயித்_பகதூர்_கான்&oldid=3478046" இலிருந்து மீள்விக்கப்பட்டது