நிருபமா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிருபமா தேவி (Nirupama Devi வங்காள மொழி: নিরুপমা দেবী ) (7 மே 1883 - 7 ஜனவரி 1951) முர்சிதாபாத் மாவட்டம் பகரம்பூரினைச் சேர்ந்த ஒரு புனைகதை எழுத்தாளர் ஆவார். இவரது புனைபெயர் ஸ்ரீமதி தேவி . நிருபமா தேவியின் தந்தை நீதித்துறை ஊழியராக இருந்த நாஃபர் சந்திரா பட்டா ஆவார். இவர் வீட்டில் இருந்து கல்வி கற்றார்.[1]

படைப்புகள்[தொகு]

உச்சிரின்கால் இவரது முதல் புதினம் ஆகும். இவரது பிற படைப்புகள் பின்வருமாறு:

  • அன்னபூர்ணார் மந்திர் (1913), அதே பெயரிலான திரைப்படத்தினை 1954 இல் நரேஷ் மித்ரா தயாரித்தார்.
  • தீதி (1915) (அவரது சிறந்த புதினமாகக் கருதப்படுகிறது) [2]
  • அலியா (1917)
  • பித்திலிப்பி (1919)
  • ஷியாமாலி (1919)
  • பந்து (1921)
  • அமர் டைரி (1927)
  • யுகந்தரேர் கத (1940)
  • அனுகர்சா (1941)

விருதுகள் மற்றும் கவுரவங்கள்[தொகு]

நிருபமா தேவி 1938 இல் 'புவன்மோஹினி தங்கப் பதக்கத்தையும்' 1943 இல் 'ஜகதரினி தங்கப் பதக்கத்தையும்' கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

சான்றுகள்[தொகு]

  1. "Devi, Nirupama - Banglapedia". en.banglapedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-08.
  2. Women Writing in India: 600 B.C. to the early twentieth century. https://archive.org/details/womenwritinginin00thar. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிருபமா_தேவி&oldid=3448396" இலிருந்து மீள்விக்கப்பட்டது