க. கமலாம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. கமலாம்மா
பிறப்பு1930
பெரும்புழா, குந்தாரா, கேரளா, இந்தியா
இறப்பு2012
பணிஎழுத்தாளர், ஆசிரியர்

க. கமலாம்மா, (G. Kamalamma 1930–2012) என்பவர் பள்ளி ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் பெரும்பாலும் மொழி மற்றும் இலக்கியம், சமூக-கலாச்சார பாடங்கள் மற்றும் சுயசரிதை ஆகிய துறைகளில் 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவை அனைத்தும் மலையாள மொழியில் எழுதப்பட்டவை. இவர் சாகித்ய அகாதமி மற்றும் கேரளாவின் சாகித்ய அகாதமி ஆகிய இரு விருதுகளையும் வென்றுள்ளார்.

பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை[தொகு]

கமலாம்மா 1930இல் கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள பெரும்புழா கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சாகித்யா-ஷிரோமணி எம்.கே.கோவிந்தன் (1901 - 1968) ஒரு சமஸ்கிருத அறிஞர், பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவரது தாயார் பெரினாட்டைச் சேர்ந்த கவிலா பெருமாள் கோவிந்தனின் மகள் கவுரிக்குட்டி ஆவார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு கமலாம்மா தனது தொழில் வாழ்க்கையை கேரள அரசின் மேம்பாட்டுத் துறையில் சமூக கல்வி அமைப்பாளராகத் தொடங்கினார், அங்கு இவர் முதல் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து, 1987 ஆம் ஆண்டில் தனது கல்வித் தொழிலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்தார்.

மலையாள மொழி மற்றும் இலக்கியம், மேற்கத்திய இலக்கியங்களை மலையாள மொழியில் மொழிபெயர்ப்பது, சிறுவர் இலக்கியம் மற்றும் வாழ்க்கை வரலாற்று விவரக்குறிப்பு ஆகியன இவரது படைப்புகளின் மையக்கருத்தாகும்.

சுயசரிதை

மொழிபெயர்ப்பு

  • வல்லதோள் சாகித்ய பிரவேசிகா - மறர் சாகித்ய பிரக்‌ஷம்[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._கமலாம்மா&oldid=3935069" இலிருந்து மீள்விக்கப்பட்டது