தியனைரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தியனைரா (Deianira, Deïanira, அல்லது Deianeira; பண்டைய கிரேக்கம் : Δηϊάνειρα, Dēiáneira, அல்லது Δῃάνειρα ) என்றழைக்கப்படுபவள் கிரேக்கத் தொன்மங்களில் குறிப்பிடப்படும் ஒரு இளவரசி ஆவாள். இவளின் பெயரானது "மனிதனை-அழிப்பவள்" [1] அல்லது " கணவனை அழிப்பவள்" [2] [3] என பொருள் கூறப்படுகிறது. இவள் ஹெராக்லஸின் மனைவியாகவும், பிற்கால பாரம்பரிய கதைகளின்படி, தன் அறியாமையினால் நெசஸின் நச்சுத்தன்மையுள்ள சட்டையால் தன் கணவனைக் கொன்றாள் எனப்படுகிறது. சாபக்ளீசின் வுமன் ஆஃப் டிராச்சிஸ் நாடகத்தில் இவர் முக்கிய கதாபாத்திரம் ஆவாள்.

குடும்பம்[தொகு]

தொன்மங்கள் மற்றும் இலக்கியம்[தொகு]

ஹெராக்ளிஸ், தியனைரா, நெசஸ் ஆகியோரை சித்தரிக்கும் சாடி ஓவியம், கி.மு. 575-550 லூவர் ( 803)

திருமணம்[தொகு]

தியனைராவின் திருமணத்தைப் பற்றிய சோஃபோக்கிள்ஸின் குறிப்புகளில், இவள் ஆச்செலஸ் நதி கடவுளால் நேசிக்கப்பட்டாள். ஆனால் மற்போரில் ஆச்செலசை தொற்கடித்து ஹெராக்லஸ் இவளைத் திருமணம் செய்துகொண்டார். [4]

டெக்ஸாமெனஸின் மகள் என்று வர்ணிக்கப்பட்ட கதையின் மற்றொரு பதிப்பில், ஹெராக்கிள்ஸ் இவளை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அவளை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார். ஹெராக்கிள்ஸ் தொலைவில் இருந்தபோது, குதிரை மனிதனான யூரிஷன் வந்து இவளை தனது மனைவியாகக் கோரினான். இதற்கு இவளுடைய தந்தை பயந்து, ஒப்புக்கொண்டார். ஆனால் திருமணம் நடப்பதற்குள் திரும்பிவந்த ஹெராக்கிள்ஸ் குதிரை மனிதனைக் கொன்று தானே இவளை மணந்துகொண்டார். [5]

தியனைராவிடம், இறக்கும் தருவாயில் உள்ள குதிரை மனிதன் ஹெராக்கிள்சை கொல்லும் சூழ்ச்சி வலைவீசி பேசுகிறான்.

தியனைரா போர்கலையுடன் தொடர்புடையவள். மேலும் " தேரை ஓட்டிச் சென்று போரிடும் கலையைக் கற்றவள்" என்று வர்ணிக்கப்பட்டாள். [6]

ஹெராக்கிள்ஸின் மரணம்[தொகு]

தியனைரா பற்றிய ஒரு கதையில், தியனைராவை ஹெராக்கிள்ஸ் அழைத்துக்கொண்டு செல்லும்போது வழியில் குறுக்கிட்ட ஆற்றின் பெருவெள்ளத்தை இவளோடு எப்படி கடப்பது என்று சிந்தித்தபடி இருந்தான். அப்போது அங்குவந்த நெசஸ் என்ற குதிரை மனிதன் தான் தியனைராவை தன் முதுகில் சுமந்து யூனோஸ் ஆற்றின் அக்கரையில் கொண்டு சேர்ப்பதாகக் கூறி இவளை அழைத்துச் சென்று, இவளை கடத்தவோ அல்லது கற்பழிக்கவோ முயன்றான். ஆனால் நீந்திவந்த ஹெராக்கிள்ஸ் குதிரை மனிதனை விஷ அம்பால் வீழ்த்தி இவளை மீட்டார். குதிரை மனிதனான நெசஸ் இறக்கும் தறுவாயில் விஷம் கலந்த தன் உதிரத்தில் தோய்த்த ஒரு மருந்தைத் தியமைனராவிடம் கொடுத்து, அகதை ஹெர்க்குலிஸின் ஆடையில் தடவி, அவ்வாடையை அவன் அணிந்து கொள்ளும்படி செய்தால், அவளிடம் அவனுடைய அன்பு நிலைத் திருக்குமென்று கூறிவிட்டு, உயிர் துறந்தான்.

தியானைரா அவன் பேச்சை நம்பி, அதை வாங்கி மறைத்து வைத்துக் கொண்டாள். ஹெராக்கிள்ஸ் கிரீசில் முறைகேடாக பல குழந்தைகளுக்கு தந்தையானார். பின்னர் அயோலைக் என்பவளைக் காதலித்தார். தனது கணவர் தன்னை விட்டு நீங்கிவிடுவார் என்று தியானைரா அஞ்சியபோது, ஹெராக்கிள்ஸின் புகழ்பெற்ற சிங்கத்தோல் சட்டையில் அந்த இரத்தத்தைக் கொஞ்சம் பூசினாள். ஹெராக்கிள்ஸின் வேலைக்காரன் லிச்சாஸ் அவருக்கு சட்டை கொண்டு வந்து தரப்பட்டது. அதை அணிந்த போது குதிரை மனிதனின் நச்சு இரத்தம் ஹெராக்ஸ் உடலில் ஊடுருவி பயங்கரமாக எரித்து துன்புறுத்தியது. இக்கொடுமையைக் தாங்க முடியாமல் இறுதியில், அவர் தானே தகணத் தீயிக்குள் சென்று இறந்தார். தன் கணவனின் சாவுக்கு தானே காரணம் ஆகிவிட்டதை உணர்ந்த விரக்தியில், தியானைரா தூக்குப்போட்டோ அல்லது வாளால் குத்திக்கொண்டோ தற்கொலை செய்து கொண்டாள்.

குறிப்புகள்[தொகு]

  1. P. Walcot, "Greek Attitudes towards Women: The Mythological Evidence" Rome, 2nd Series, 31:1:43 (April 1984); at JSTOR
  2. Koine. Y. (editor in chief), Kenkyusha's New English-Japanese Dictionary, 5th ed., Kenkyusha, 1980, p.551.
  3. Antoninus Liberalis. Metamorphoses, Notes and Commentary on Meleagrides sv. Deianira, p.111
  4. Wohl, Victoria (2010). "A Tragic Case of Poisoning: Intention Between Tragedy and the Law". Transactions of the American Philological Association 140 (1): 53. 
  5. Hyginus. Fabulae, 31
  6. Bibliotecha I.8.1
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியனைரா&oldid=3068341" இலிருந்து மீள்விக்கப்பட்டது