மாந்தாதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதாத்திரி
மாந்தாதா
விஷ்ணு பகவான் இந்திரன் வேடத்தில் மாந்தாதாவிற்கு சத்திரியனின் கடமைகளை எடுத்துரைக்கும் சித்திரம்
தகவல்
குடும்பம்யுவஸ்வா (தந்தை)
துணைவர்(கள்)பிந்துமதி சைத்திரரதி
பிள்ளைகள்பிருகுத்சன், அம்பரீசன், முசுகுந்தன்

மாந்தாதா அல்லது மாந்தாத்திரி (Mandhatri or Mandhata) (சமக்கிருதம்: मान्धातृ, Māndhātṛ), இந்து தொன்மவியலில் இவர் இச்வாகு குலத்தில் தோன்றிய மன்னரும், அயோத்தி மன்னர் யுவனசுவரின் மகனும் ஆவார்.[1] இவர் யாதவ குல மன்னர் சசபிந்துவின் மகளான சித்திரரதையை மணந்தவர்.[2] புராணகளின் படி, இவரது வழித்தோன்றல்கள் பிருகுத்சன், அம்பரீசன், முசுகுந்தன் ஆவார்.[3]

ரிக் வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் மன்னர் மாந்தாதாவின் குறிப்புகள் உள்ளது.[4]

மகாபாரத்தின் துரோண பருவத்தில், மாந்தாதா சூரிய வம்சத்தின் இச்வாகு குல மன்னராக கூறப்படுகிறது.[5][6]

இறப்பு[தொகு]

மதுபுரியை ஆண்ட லவணாசூரன் எனும் அசுரனுடன் மாந்தாதா போரிடும் போது, லவணாசூரனுக்கு சிவபெருமான் அருளிய திரிசூலத்தால் மாந்தாதா கொல்லப்பட்டார். பிற்காலத்தில் லவணாசூரனை சத்ருக்கனன் போரில் கொன்றார்.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. John Dowson (1870), A classical dictionary of Hindu Epic and religion, geography, history, and literature, Trübner & Co., pp. 197–8
  2. Pargiter 1972, ப. 150.
  3. Pargiter 1972, ப. 93.
  4. Pargiter 1972, ப. 102-4.
  5. மன்னன் மாந்தாதா! - துரோண பர்வம் பகுதி – 062
  6. Mahabharata, III.126

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாந்தாதா&oldid=3801627" இலிருந்து மீள்விக்கப்பட்டது