ஆர். வாசுதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். வாசுதேவன்
R. Vasudevan
பிறப்பு(1942-03-27)27 மார்ச்சு 1942
தமிழ்நாடு, India
இறப்பு25 சூலை 2010(2010-07-25) (அகவை 68)
பணிஆட்சிப் பணியாளர்
விருதுகள்பத்மசிறீ

ஆர். வாசுதேவன் (R. Vasudevan) ஓர் இந்திய ஆட்சிப்பணி அலுவலராவார்.[1] இராசீவ் காந்தி இந்தியப் பிரதமராக இருந்த போது அவருடைய சிறப்புச் செயலாளராகவும்[2] இந்திய அரசாங்கத்தின் எஃகு அமைச்சகம் மற்றும் மின் அமைச்சக செயலாளராகவும் பணியாற்றினார்.[3] தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் பிறந்த வாசுதேவன் தில்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரமும் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.[3] 2010 ஆண்டு சூலை மாதம் 25 அன்று வாசுதேவன் இறந்தார்.[4] இந்திய அரசு இவருக்கு மரணத்திற்குப் பின் 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்துள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian Express". Indian Express. 2015. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
  2. http://archives.digitaltoday.in/businesstoday/20040620/trends2.html
  3. 3.0 3.1 "Babus of India". Babus of India. 2015. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
  4. "Tribute to Mr R Vasudevan (IAS Retd)". The Times of India. 25 July 2012. பார்க்கப்பட்ட நாள் 14 August 2016.
  5. "Padma Awards". Padma Awards. 2015. Archived from the original on 26 January 2015. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._வாசுதேவன்&oldid=3773315" இலிருந்து மீள்விக்கப்பட்டது