நண்டலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நண்டலாறு (Nandalar) என்னும் ஆறானது இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் இடையே ஓடும் ஆறாகும். இது திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு எல்லைக் கோடாகச் செயல்படுகிறது.

பொருள்[தொகு]

நண்டலாறு => நண்ட (நண்டு) + கல் (பாறை) + பாறையில் நண்டுகளின் புதைபடிமம். இந்த ஆற்றில் உள்ள பாறைகளின் நண்டுகளின் புதைபடிமம் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த ஆற்றிற்கு நண்டலாறு என்று பெயர் வந்தது.

தோற்றம்[தொகு]

நண்டலாறு காவிரி நதியின் கிளை ஆறாகும். இது கும்பகோணத்திற்கு அருகில் காவேரியிலிருந்து பிரிந்து கும்பகோணம், கோமல், அவாசிக்கரை, நல்லாத்தூர் வழியாக வங்காள விரிகுடாவில் சந்திரபாடிக்கும் தரங்கம்படிக்கும் இடையில் கடலில் கலக்கிறது.[1]

மேலும் காண்க[தொகு]

தமிழகத்தின் நதிகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "The district at a glance: Irrigation". Tiruvarur District. The District Collector, Thiruvarur District. Archived from the original on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 7 January 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நண்டலாறு&oldid=3846563" இலிருந்து மீள்விக்கப்பட்டது