இரண்டாம் ருத்திரசேனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலைப்பாகை அணிந்த இரண்டாம் ருத்திரசேனர் (கிபி256-278) நாணயம்[1]

இரண்டாம் ருத்திரசேனர் ( Rudrasena II) (கிபி:256–278) மேற்கு இந்தியாவை ஆண்ட மேற்கு சத்ரபதி இராச்சியத்தின் ஆட்சியாளர் ஆவார். இவரது ஆட்சியில் மேற்கு சத்ரபதி இராச்சியம் வளத்திலும், பரப்பளவிலும் உயர்ந்து நின்றது. இவர் பௌத்த சமயத்தை ஆதாரித்தார்.

இரண்டாம் ருத்திரசேனர் ஆட்சியின் போது சாதவாகனர்கள் கைப்பற்றிய மத்திய இந்தியாவின் சாஞ்சி மற்றும் விதிஷா பகுதிகளை இரண்டாம் ருத்திரசேனர் மீண்டும் கைப்பற்றினார்.

இரண்டாம் ருத்திரசேனர் ஆட்சியில், மேற்கு சத்ரபதிகள், ஆந்திர இசுவாகு மரபினருடன் கூட்டாளியாக இருந்தனர். மேற்கு சத்திரபதி இராச்சியத்திற்குட்பட்ட உஜ்ஜைன் ஆடசியாளரின் மகள் ருத்திரதாரா-பட்டாரிகா, ஆந்திர இட்சுவாகு மன்னர் மாதாரிபுத்திர வீரபுருசதத்தரின் மனைவியாவர். [4][5][6]

இறுதியாக மேற்கு சத்திரபதிகளின் இராச்சியத்தை குப்தப் பேரரசர் சமுத்திரகுப்தர் (335-75) கைப்பற்றினார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_ருத்திரசேனர்&oldid=3759038" இலிருந்து மீள்விக்கப்பட்டது