இராம காந்த் சுக்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம காந்த் சுக்லா
2019இல் நடந்த கடிதங்களின் விழாவில் இராம காந்த் சுக்லா
பிறப்புதிசம்பர் 24, 1940 (1940-12-24) (அகவை 83)
குர்ஜா, உத்தரப் பிரதேசம், இந்தியா
பணிசமசுகிருத அறிஞர் மற்றும் எழுத்தாளர்
விருதுகள்பத்மசிறீ
உத்தரப் பிரதேச மாநில விருது
'சமசுகிருத ராட்டிரகவி
கவிரத்னா
கவி சிரோண்மணி
இந்து சமசுகிருத சேது
காளிதாஸ் சம்மன் விருது
சமசுகிருத சாகித்ய சேவா சம்மன்
அகில பாரதிய மௌலிகா சமசுகிருத ரக்சனா புரசுகாரம்
இந்தியக் குடியரசுத் தலைவரின் விருது
வலைத்தளம்
Official web site

இராம காந்த் சுக்லா (Rama Kant Shukla) இவர் சமசுகிருதம் மற்றும் இந்தி மொழிகளில் இந்திய அறிஞராவார். [1] இலக்கியத் துறைகளில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருதை 2013 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு வழங்கியது. [2]

சுயசரிதை[தொகு]

இராம காந்த் சுக்லா 1940 திசம்பர் 25 ஆம் தேதி இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள குர்ஜா நகரில் பிறந்தார். [3] [4] இவரது ஆரம்ப ஆய்வுகள் பாரம்பரிய முறையில் இருந்தன. இவர் தனது பெற்றோர்களான சாகித்யாச்சார்யா பண்டிட். பிரம்மானந்த் சுக்லா மற்றும் திருமதி. பிரியம்வதா சுக்லா ஆகியோரிடமிருந்து சமசுகிருதத்தைக் கற்றுக்கொண்டார். மேலும் சாகித்யாச்சார்யா மற்றும் சாங்க்ய யோகாச்சார்யா பட்டங்களை பெற்றார். பின்னர், ஆக்ரா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தங்கப் பதக்கத்துடன் இந்தி இலக்கியத்தில் முதுகலை தேர்ச்சி பெற்றார். பின்னர் சம்பூர்ணானந்த சமசுகிருத பல்கலைக்கழகத்தில் சமசுகிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1967 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் 'ஜைனாச்சார்யா ரவிசேனா- கிருதா பத்மபுராணம் (சமசுகிருதம்) எவாம் துளசிதாச கிருதா ராமச்சரிதமனசு கா துலானாத்மக் அதயாயன்' என்றத் தலைப்பில் இருந்தது. [1]

1962 ஆம் ஆண்டில் மோடி நகரில் உள்ள மூல்தானிமால் மோடி முதுகலை கல்லூரியில் இந்தி விரிவுரையாளராக சேர்ந்து சுக்லா தனது வாழ்க்கையைத் தொடங்கினார். முனைவர் பட்டம் பெற்ற பிறகு, 1967 ஆகத்து 1, அன்று இந்தி ஆசிரிய உறுப்பினராக புதுதில்லி, தில்லி பல்கலைக்கழகத்தின் ராஜதானி கல்லூரி சேர்ந்தார். 1986 ஆம் ஆண்டில், இவர் இந்தி துறையின் வாசகராக நியமிக்கப்பட்டு 2005 இல் ஓய்வு பெறும் வரை அங்கு பணியாற்றினார். [3] [4] உலக சமசுகிருத மாநாடு உட்பட பல கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். இந்திய அழகியல் மற்றும் கவிதை மற்றும் சமசுகிருத இலக்கியங்கள் குறித்த அகில இந்திய ஓரியண்டல் மாநாடுகளின் தலைவராக உள்ள இவர், தில்லி, தேவவானி பரிசத் என்ற அமைப்பு சமசுகிருதத்தில் வெளியிடும் அர்வச்சீனா என்ற காலாண்டு இதழின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியராக உள்ளார். மேலும், சமசுகிருத மொழியைக் குறிக்கும் அனைத்திந்திய வானொலியின் சர்வமொழி கவி சம்மேளனத்திலும் பங்கேற்றுள்ளார்.

புத்தகங்கள்[தொகு]

சுக்லா, சமசுகிருதம் மற்றும் இந்தி மொழிகளில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். [4] [5] தூர்தர்ஷன் ஒளிபரப்பிய பாட்டி மீ பாரதம் என்ற சமசுகிருத தொலைக்காட்சித் தொடரையும் எழுதி இயக்கியுள்ளார். [6]

ராட்டிரிய சமசுகிருத சமசுகிருத சன்சுதானத்தில் சாத்திர சூடாமனி வித்வானாக கடமையாற்றிவரும் சுக்லா புதுதில்லியில் வசிக்கிறார். [3]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Bhati Me Bharatam Episode-11 recited by Dr.Ramakant shukla". Video. YouTube. 25 May 2010. பார்க்கப்பட்ட நாள் 27 October 2014.
  2. "Padma 2013". Press Information Bureau, Government of India. 25 January 2013. பார்க்கப்பட்ட நாள் 10 October 2014.
  3. 3.0 3.1 3.2 "Sanskrit". Government of India. 2014. பார்க்கப்பட்ட நாள் 27 October 2014.
  4. 4.0 4.1 4.2 "Library of Congress". Government of India. 201. பார்க்கப்பட்ட நாள் 27 October 2014.
  5. Dr. Rama Kant Shukla (2002). "Bharatajnataham". Vedic Books. பார்க்கப்பட்ட நாள் 27 October 2014.
  6. "Bhati Me Bharatam". Pawan Alluru. 1989. பார்க்கப்பட்ட நாள் 27 October 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம_காந்த்_சுக்லா&oldid=2974889" இலிருந்து மீள்விக்கப்பட்டது