சிகாரிபுரா இரங்கநாத ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிகாரிபுரா இரங்கநாத ராவ்
பிறப்புசிகாரிபுரா இரங்கநாத ராவ்
(1922-07-01)1 சூலை 1922
ஆனந்தபுரம், சாகர் வட்டம், சிமோகா மாவட்டம், முந்தைய மைசூர் மாநிலம் (இப்போது கர்நாடகா)
இறப்பு3 சனவரி 2013(2013-01-03) (அகவை 90)
தேசியம்இந்தியன்
பணிதொல்பொருள் ஆய்வாளர்

சிகாரிபுரா ரங்கநாத ராவ் (Shikaripura Ranganatha Rao) (பிறப்பு: 1922 சூலை 1 [1] - இறப்பு: 2013 சனவரி 3), பொதுவாக முனைவர் எஸ். ஆர். ராவ் எனப்படும் இவர் இந்திய தொல்பொருள் ஆய்வாளர் ஆவார். இவர் துறைமுக நகரமான லோத்தல் மற்றும் குசராத்தில் உள்ள பேட் துவாரகை உள்ளிட்ட பல சிந்துவெளி நாகரிகத் தளங்களை கண்டுபிடித்த பெருமைக்குரிய குழுக்களுக்கு தலைமை தாங்கினார்.

சுயசரிதை மற்றும் தொழில்[தொகு]

இராவ் 1922 சூலை 1 அன்று ஒரு மாத்வ பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். மைசூர் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை முடித்தார். பின்னர் இவர் பரோடா மாநில தொல்பொருள் துறையில் பணியாற்றினார். பின்னர் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றினார். இரங்க்பூர், அம்ரேலி, பகத்ரவ், துவாரகை, அனூர், அய்கொளெ, காவிரிப்பூம்பட்டினம் மற்றும் பல முக்கியமான தளங்களின் அகழ்வாராய்ச்சிக்கு இராவ் தலைமை தாங்கினார். இவரது மிக முக்கியமான படைப்புகளில் ஒன்று, வரலாற்றில் முதன்முதலில் அறியப்பட்ட துறைமுகமாகவும், இந்தியாவின் மிக முக்கியமான சிந்து காலத்து தளமான லோத்தலில் ஆராய்ச்சி மற்றும் அகழ்வாராய்ச்சிகளுக்கு வழிவகுத்தது. ராவ் ஜவகர்லால் நேரு பெல்லோஷிப் மற்றும் மைசூர் பல்கலைக்கழகத்தில் இலக்கிய முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். மேற்கு மற்றும் தெற்கில் நாடு முழுவதும் பல வரலாற்று இடங்களை அகழ்வாராய்ச்சி செய்வதை இராவ் மேற்பார்வையிட்டார்.

தாஜ்மகால் மற்றும் கோட்டைகள் போன்ற நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பிலும் இவர் தொடர்பு கொண்டிருந்தார். 1980இல் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்ற போதிலும், முன்னணி இந்திய தொல்பொருள் திட்டங்களில் தலைமைப் பணியில் பணியாற்றுமாறு இராவ் கோரப்பட்டார். இராவின் முன்முயற்சியின் கீழ் தான், 1981ஆம் ஆண்டில் தேசிய கடலியல் நிறுவனம் ஒரு கடல் தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தைத் திறந்தது. அப்போதைய இயக்குனர் சையத் ஜாகூர் காசிமின் பணிப்பாளரின் கீழ், இது உலக அங்கீகாரம் பெற்ற அமைப்பாக வளர்ந்தது. அவர் இந்தியாவில் கடல் தொல்பொருள் சங்கத்தின் நிறுவனர் ஆவார். இராவ் பல தசாப்தங்களாக இந்திய தொல்பொருளியல் துறையில் முன்னணியில் உள்ளார் - சிந்து சமவெளி நாகரிகத்தின் தளங்கள் முதல் குருச்சேத்திர போர் தொடர்பான அகழ்வாராய்ச்சிகள் வரை இந்தியாவின் பண்டைய கடந்த காலத்தைப் பற்றிய விரிவான ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

சிந்துவெளி எழுத்துக்களை புரிந்துகொள்ளுதல் உரிமைகோரல்[தொகு]

இராவ் (1992) [2] சிந்துவெளி வரிவடிவத்தை புரிந்துகொண்டதாகக் கூறினார். சிந்து-கால நாகரிகத்தின் முழு அளவிலும் வரிவடிவத்தின் சீரான தன்மையைக் காட்டிய இவர் அதை பீனீசியன் எழுத்துக்களுடன் ஒப்பிட்டு, இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் ஒலி மதிப்புகளை ஒதுக்கினார்.

பிரதான கல்வியாளர்கள் பொதுவாக இராவின் ஒப்பீட்டு அணுகுமுறையுடன் உடன்பட்டாலும், இவரது புரிந்துகொள்ளுதலின் விவரங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும் எழுத்துக்கள் இன்னும் குறிப்பிடப்படாததாகக் கருதப்படுகிறது. ஜான் ஈ. மிட்சினெர், புரிந்துகொள்வதற்கான இன்னும் சில கற்பனையான முயற்சிகளை நிராகரித்த பின்னர், "வரிவடிவத்தில் இந்திய -ஐரோப்பிய மொழிகளின் அடிப்படையை அறிய மிகவும் உறுதியான. ஆனால் இன்னும் பெரிதும் அகநிலை மற்றும் நம்பமுடியாத முயற்சி ராவ் தான்" என்று குறிப்பிடுகிறார்.[3]

2002 ஆம் ஆண்டில் தி இந்து இதழுக்கு அளித்த பேட்டியில், இராவ் தனது புரிந்துகொள்ளுதலில் தனது நம்பிக்கையை வலியுறுத்தினார். "இது நிச்சயமாக ஒரு இந்திய-ஆரிய மொழி என்பதை சமீபத்தில் நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். மேலும் அது புரிந்துகொள்ளப்பட்டது. புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.டபிள்யுடபிள்யு டி க்ரம்மண்ட் தனது கட்டுரையில் 'நான் ஏற்கனவே புரிந்துகொண்டுள்ளேன்' என்று எழுதியுள்ளார். "

குறிப்புகள்[தொகு]

  1. https://www.google.com/search?q=%22Rao%2C+S.R.%22+who%27s+who+1922&btnG=Nach+B%C3%BCchern+suchen&tbm=bks&tbo=1&hl=de
  2. Elst, Koenraad. "The Vedic Harappans in writing Dr. Koenraad Elst, Remarks in expectation of a decipherment of the Indus script". Archived from the original on 4 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 17 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. John E. Mitchiner (1978), Studies in the Indus Valley Inscriptions, Oxford & IBH, p. 5

வெளி இணைப்புகள்[தொகு]