பஞ்சாப் கரானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைம்முரசு இணை வாசிப்பு

பஞ்சாப் காரனா (Punjab Gharānā) சில நேரங்களில் பஞ்சாபி என்றும் அழைக்கப்படும் இது இன்றைய பாக்கித்தானிலும் மற்றும் இந்தியாவிலும் பிளவுபட்டுள்ள பஞ்சாப் பிராந்தியத்தில் தோன்றிய கைம்முரசு இணையை வாசிக்கும் ஒரு பாணி மற்றும் நுட்பமாகும்.

பரம்பரை[தொகு]

கைம்முரசு இணை மேதைகள்[தொகு]

அல்லா ரக்கா (1919-2000)[தொகு]

ஆசிரியர்: இரண்டாம் மியான் காதிர் பக்ஷ் அல்லா ராகா கான் இருபதாம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான மற்றும் பரவலாக பதிவு செய்யப்பட்ட கைம்முரசு இணை இசைக்கலைஞர்களில் ஒருவராவார். கைம்முரசு இணைக்கு ,. . உஸ்தாத் அல்லா ராக்கா அத்தகைய கலைஞராக இருந்தார். இவரது கருவியில் முன் எப்போதும் அனுபவிக்காத ஒரு அந்தஸ்தையும் மரியாதையையும் கொண்டு வந்தார். இவர் 1940களின் பிற்பகுதியில் லாகூரிலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தார். மேலும் 1962ஆம் ஆண்டு முதல் இந்திய இசை வல்லுநரும் மற்றும் சித்தார் வாசிப்பாளருமான ரவிசங்கர் தனது வழக்கமான துணையாக இவரைத் தக்க வைத்துக் கொண்டபோது, மக்கள் பார்வையில் இருப்பதற்கான வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார். ராகா கைம்முரசு இணைக் கலையை பிரபலப்படுத்தினார். உலகம் முழுவதும் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். இவரது கருவியின் அந்தஸ்தையும் மரியாதையையும் உயர்த்தினார். அப்பாஜி என்று தனது சீடர்களால் அன்பாக அறியப்பட்ட இவர் புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர்கள் மற்றும் பிற இந்துஸ்தானி கலைஞர்களுடன் இசைப்பதன் மூலம் கர்நாடக இசைக்கும் இந்துஸ்தானி இசைக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்தார். ராக் அன் ரோலில் முன்னணி அமெரிக்க தாளவாதிகளான கிரேட்ஃபுல் டெட்'ஸ் மிக்கி ஹார்ட் போன்றவர்கள் இவரைப் பாராட்டினர். மேலும், இவரது நுட்பத்தைப் படித்தனர். ரக்கா ஜாஸ் மேதை பட்டி ரிச்சு என்பவருடன் இணைந்து, 1968இல் ஒரு இசைத் தொகுப்பை பதிவு செய்தார். இவரது தொடர்ச்சியான அற்புதமான இசை நிகழ்ச்சிகள்ள் கைம்முரசு இணையை உலகம் முழுவதும் ஒரு பழக்கமான தாள கருவியாக மாற்றின. 1985ஆம் ஆண்டில், பஞ்சாப் கரானாவின் பாரம்பரியத்தில் இளம் கைம்முரசு கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்க உஸ்தாத் அல்லா ராக்கா இசைப்பள்ளி ஒன்றை நிறுவினார். உஸ்தாத் அல்லா ராகா 2000 பிப்ரவரி 3, அன்று இறந்தார். உண்மையிலேயே நம் காலத்தில் இந்தியாவிலிருந்து வெளிவந்த மிக முக்கியமான மற்றும் செல்வாக்கு மிக்க கலைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். [1]

tabla
ஒரு பழைய கைம்முரசு இணை

மியான் சௌகத் உசேன் கான் (1930-1996)[தொகு]

ஆசிரியர்கள்: பண்டிட் ஹிரலால் & மியான் காதிர் புக்ஷ் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகவும் தனித்துவமான சுர் / தொனியால் வகைப்படுத்தப்பட்ட மியான் சௌகத் உசேன் கான் தெற்காசியாவின் மிகச்சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவராக உள்ளார். வட இந்திய பாரம்பரிய இசையில் மிக உயர்ந்த தரவரிசை பெற்ற "மியான்" (அறிவைக் கொண்டவர் என்று பொருள்) என்ற பட்டத்தை வழங்கிய பஞ்சாப் கரானாவின் கடைசி கைம்முரசு இணை கலைஞர் இவர். இதனால் இவர் தனது ஆசிரியர் மியான் காதிர் பக்ஷுக்குப் பிறகு பஞ்சாப் கரானாவின் மிகச் சிறந்த கைம்முரசு இணைக் கலைஞராகக் கருதப்படுகிறார்.

சௌகத் உசேன் தானே சுயமாக இசையமைத்த கைதாக்கள் மூலம் இசையுலகில் தனிப் புகழ் பெற்றார். அவை இப்போதும் இவரது மாணவர்களால் பெருமையுடன் இசைக்கப்படுகின்றன. இவர் "டெட்-தீட்" பாடத்தில் தேர்ச்சி பெற்றவர். இந்த விஷயத்தில் அவரது கைதாக்கள் கைம்முரசு இணை அனைத்து கரானாக்களிலும் சிறந்தவை. 3 விரல் தேரே-கெட்டேவின் இவரது பாணி இசை இசை தெரிந்த பார்வையாளர்களிடையே விமர்சன புகழைப் பெற்றது.

ஜாகிர் உசேன் (பிறப்பு 1951) இப்போது 69 வயது[தொகு]

ஆசிரியர் / தந்தை: உஸ்தாத் அல்லா ரக்கா

ஜாகிர் உசேன் நவீன யுகத்தின் மிகவும் பிரபலமான மற்றும் செல்வாக்கு மிக்க கைம்முரசு இணைக்கலைஞர் ஆவார். உஸ்தாத் ஜாகிர் உசேன் மற்ற கைம்முரசு இணைக்கலைஞர்களை விட அதிகம், இவர் ஒரு இசை நிகழ்வு, இவர் கைம்முரசு இணை மற்றும் அதை வாசிக்கும் இசைக்கலைஞர்களைப் பற்றி நாம் நினைக்கும் விதத்தை மாற்றியுள்ளார். அல்லா ரக்காகானின் மகனான, இவர் ஒரு குழந்தை அதிசயமாவார். தனது பன்னிரண்டு வயதிற்குள் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். இவர் 1970இல் அமெரிக்காவிற்குச் சென்றார். ஆண்டுக்கு 160க்கும் மேற்பட்ட கச்சேரி தேதிகளை உள்ளடக்கிய ஒரு சர்வதேச வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பல இசைத் தொகுப்புகள் மற்றும் ஒலிப்பதிவுகளை இயற்றி பதிவு செய்துள்ளார். மேலும் இவரது பல குழுக்களுக்கும் ஒத்துழைப்புகளுக்கும் ஒரு இசையமைப்பாளராக பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். [2]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tabla
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாப்_கரானா&oldid=2937114" இலிருந்து மீள்விக்கப்பட்டது