தாம்பரம் சானடோரியம் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 12°56′13″N 80°7′50″E / 12.93694°N 80.13056°E / 12.93694; 80.13056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாம்பரம் சானடோரியம்
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்மீனாட்சி சாலை, காமகோட்டி நகர், தாம்பரம் சானடோரியம், சென்னை, தமிழ்நாடு - 600 047, இந்தியா
ஆள்கூறுகள்12°56′13″N 80°7′50″E / 12.93694°N 80.13056°E / 12.93694; 80.13056
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள்தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுTBMS
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1900களின் முற்பகுதி
மின்சாரமயம்15 நவம்பர் 1931[1]
முந்தைய பெயர்கள்தென்னிந்திய இரயில்வே
அமைவிடம்
தாம்பரம் சானடோரியம் is located in சென்னை
தாம்பரம் சானடோரியம்
தாம்பரம் சானடோரியம்
சென்னை வரைபடத்தில் உள்ள இடம்
தாம்பரம் சானடோரியம் is located in தமிழ் நாடு
தாம்பரம் சானடோரியம்
தாம்பரம் சானடோரியம்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
தாம்பரம் சானடோரியம் is located in இந்தியா
தாம்பரம் சானடோரியம்
தாம்பரம் சானடோரியம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

தாம்பரம் சானடோரியம் தொடருந்து நிலையம் (Tambaram Sanatorium railway station, நிலையக் குறியீடு:TBMS) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது.

இது சென்னைக் கடற்கரை நிலையத்திலிருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 32மீ (105 அடி) உயரத்தில் உள்ளது.இது சென்னை நகரத்தின் தெற்கே 27 கி.மீ தொலைவில் உள்ளது.

வரலாறு[தொகு]

இந்த நிலையம் சென்னை நகரின் முதல் புறநகர் வழித்தடமான சென்னைக் கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. 1928இல் தொடங்கி மார்ச் 1931இல் இருப்புப்பாதை பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் தொடருந்து சேவைகள் 11 மே 1931 அன்று சென்னைக் கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையில் தொடங்கப்பட்டன. இது நவம்பர் 15, 1931இல் மின்மயமாக்கப்பட்டது.[1]

1970 ஆம் ஆண்டு அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை விரிவடைந்து முக்கியத்துவம் பெற்றபோது, ​​இந்த இரயில் நிலையம் உள்ளூர் மக்களுக்கு சேவை செய்ய கட்டப்பட்டது.[2]

பாதுகாப்பு[தொகு]

புறநகர் பகுதியான கிண்டி - செங்கல்பட்டு மார்க்கம் மிகப்பெரிய விபத்து மண்டலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தாம்பரம் - குரோம்பேட்டை வரையிலான இரயில்பாதையில், 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒவ்வொரு மாதமும் சுமார் 15 விபத்துக்கள் நிகழ்கிறது.

சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Electric Traction - I". IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  2. "Govt. Hospital of Thoracic Medicine" (PDF). GHTM.in. Archived from the original (PDF) on 14 செப்டெம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச்சு 2013.

வெளி இணைப்புகள்[தொகு]