சின்சோலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ன்சோலி (Chincholi) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்கா மாவட்டத்தில் ஒரு பஞ்சாயத்து நகரம் மற்றும் ஒரு வட்டம் ஆகும்.

நிலவியல்[தொகு]

சின்சோலி 17.47 ° N 77.43 ° கிழக்கில் அமைந்துள்ளது.[1] இதன் சராசரி உயரம் 462 மீட்டர் (1515 அடி). இந்த நகரம் 6 கிமீ² பரப்பளவில் பரவியுள்ளது.[2]

புள்ளி விவரங்கள்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சின்சோலி மக்கள் தொகை 20,897 என்ற அளவில் இருந்தது. ஆண்களில் 10,852 பேரும், பெண்களில் 10,045 பேரும் இருந்தனர். சின்சோலி வட்டம் குல்பர்கா மாவட்டத்தின் பின்வரும் வட்டங்களின் எல்லையாகும்: மேற்கில் குல்பர்கா வட்டம், தென்மேற்கில் சிட்டாபூர் வட்டம் மற்றும் தெற்கே சேதம் வட்டம். இது வடக்கே பிதர் மாவட்டத்தின் ஹும்னாபாத் வட்டத்திற்கும், கிழக்கில் தெலுங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தின் தந்தூர் மண்டலத்துக்கும், வடகிழக்கு தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தின் மொகுதம்பள்ளி மண்டலத்திற்கும் எல்லையாகும்.

அரசியல்[தொகு]

சின்சோலி சின்சோலி சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[3] பீதர் (மக்களவைத் தொகுதி) இரண்டு முறை கர்நாடக முதலமைச்சராக ஆன வீரேந்திர பாட்டீல் இந்த வட்டத்தைச் சேர்ந்தவராவார். ஐதராபாத்-கர்நாடக இயக்கத் தலைவர் வச்சினாத் பாட்டீல், சுதந்திர போராட்ட வீரரும் காங்கிரசின் தலைவர் சையத் மொயினுதீன் என்பவ்ரும் இந்த ஊரைச் செர்ட்ந்தவர்கள்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்சோலி&oldid=3806383" இலிருந்து மீள்விக்கப்பட்டது