மலேசியாவின் மனித உரிமை ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய மனித உரிமைகள் ஆணையம்
Human Rights Commission of Malaysia
Suruhanjaya Hak Asasi Manusia Malaysia

SUHAKAM
துறை மேலோட்டம்
அமைப்பு3 ஏப்ரல் 2000; 24 ஆண்டுகள் முன்னர் (2000-04-03)
வகை மலேசிய அரசாங்கம்
தலைமையகம்Tingkat 11, Menara TH Perdana, Jalan Sultan Ismail, 50250 கோலாலம்பூர்
குறிக்கோள்அனைவருக்கும் மனித உரிமைகள்
(Human Rights For All)
(Hak Asasi Untuk Semua)
ஆண்டு நிதிMYR 10,116,300 (2018)
அமைப்பு தலைமை
  • ரகுமாட் முகமட்
    Rahmat Mohamad [1]
மூல அமைப்புமலேசிய நாடாளுமன்றம்
வலைத்தளம்suhakam.org.my
அடிக்குறிப்புகள்
மலேசிய மனித உரிமை ஆணைய சட்டம் 1999, சட்டம் 597
Human Rights Commission of Malaysia Act 1999, Act 597

மலேசிய மனித உரிமைகள் ஆணையம் எனும் சுககாம் மலேசியா; (மலாய்: Suruhanjaya Hak Asasi Manusia Malaysia (SUHAKAM); ஆங்கிலம்: Human Rights Commission of Malaysia) (PSC); என்பது மலேசியாவில் நன்கு அறியப்பட்ட ஒரு தேசிய மனித உரிமை நிறுவனம் (National Human Rights Institution)) ஆகும்.

இது மலேசியாவின் மனித உரிமைகள் ஆணையம் சட்டம் 1999, சட்டம் 597,[2] இன் கீழ் மலேசிய நாடாளுமன்றத்தால் நிறுவப்பட்டது. மேலும், ஏப்ரல் 2000-இல் அதன் பணிகளைத் தொடங்கியது.[3] மனித உரிமைக் கல்வியை ஊக்குவித்தல், சட்டம் மற்றும் கொள்கை குறித்து ஆலோசனை வழங்குதல் மற்றும் விசாரணைகளை நடத்துவதே இதன் பொறுப்பு ஆகும்.

பொது[தொகு]

அன்வர் இப்ராகீம் சர்ச்சைக்குப் பின்னர், அப்போதைய பிரதமர் துன் மகாதீர் பின் முகமதுவின் அரசாங்கத்திடம் இருந்து இந்த அமைப்பின் சுதந்திரம் குறித்து சிலருக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. இருப்பினும், டான் ஸ்ரீ டத்தோ மூசா ஈத்தாம் (ஆரம்பத்தில், 13 உறுப்பினர்கள்) ஆணையத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டபோது, இந்த அச்சங்கள் தளர்த்தப் பட்டன

ஏனெனில் அவர் மகாதீரை பல வழிகளில் விமர்சிப்பார் என்று நம்பப்பட்டது.[4] எவ்வாறாயினும், மூசா ஈத்தாமின் கீழ் ஆணையத்தின் பரிந்துரைகள் பெரும்பாலும் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படவில்லை. அவரின் இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிந்ததும், அவர் மீண்டும் நியமனம் செய்யப்படவில்லை.

2002-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டான் ஸ்ரீ அபு தாலிப் ஓத்மானைக் கொண்டு மூசா மாற்றப்பட்டார். அபு தாலிப் மகாதீரின் கீழ் மலேசிய அரசுத் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றினார், மேலும் அன்வர் இப்ராகீம் சர்ச்சையிலும் சிக்கினார். மலேசியா கினியில் தெரிவிக்கப்பட்டபடி, அவர் மகாதீருடன் நெருக்கமாகக் காணப்பட்டார். ஆனால் அபு தாலிப்பின் கீழ் சுககாம் தொடர்ந்து பல மனித உரிமை பரிந்துரைகளை முன்வைத்தார். இந்த பரிந்துரைகள் பல இன்னும் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படவில்லை.

தற்பொழுது ஸ்ரீ ஒத்மான் அசிம் என்பவர் இதன் தலைவராக உள்ளார்.[5]

பன்னாட்டு நிலைப்பாடு[தொகு]

தேசிய மனித உரிமை ஆணைய நிறுவனங்களின் பிராந்திய வலையமைப்பான ஆசிய பசிபிக் மன்றத்தின் (ஏபிஎஃப்) முழுத்தகுதி வாய்ந்த உறுப்பினராக சுககாம் அங்கீகாரம் பெற்றது. மேலும், தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் பன்னாட்டு ஒருங்கிணைப்புக் குழுவால் (ஐ.சி.சி) மறு அங்கீகாரம் பெற்றது. இப்போது ஆசிய பசிபிக் மன்றம் இந்த அங்கீகாரத்தை எதிர்க்கிறது.

2008 ஆம் ஆண்டில் பன்னாட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கீகார துணைக் குழுவால் சுககாம் அமைப்பின் தகுதிநிலையை ஏ நிலையிலிருந்து பி நிலைக்கு ஏன் தரமிறக்கப்படக் கூடாது என்பதற்கான தனது எழுத்துப் பூர்வமான விளக்கத்தை ஒரு வருடத்திற்குள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த தரமிறக்கமானது ஐக்கிய நாடுகள் அமைப்பில் இந்த அமைப்பிற்கான சில அணுகல் முன்னுரிமைகளை இழக்கச் செய்யும்.[6]

மேலதிக மறுஆய்வு[தொகு]

இந்த அமைப்பின் நிறுவன சட்டங்களில் திருத்தம் செய்து அதை மேலும் தன்னாட்சியானதாக்க மலேசிய அரசாங்கத்தை ஊக்குவிக்க பன்னாட்டு ஒருங்கிணைப்புக் குழு முயன்றது. எவ்வாறாயினும், நவம்பர் 2009-இல் பன்னாட்டு ஒருங்கிணைப்புக் குழுவால் சுககாம் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

அப்போது, ஆணையத்தின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை தொடர்பாக குறிப்பாக கவனம் செலுத்தி, 2010 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள மேலதிக மறுஆய்வை நிலுவையில் வைத்தது.[7]

மலேசியாவில் குழந்தைத் திருமணங்கள்[தொகு]

சுககாம் தலைவர் ரசாலி இசுமாயில் மலேசியாவில் மீண்டும் மீண்டும் நடக்கும் குழந்தைத் திருமணங்களை "வறுமைக்கான தீர்வல்ல - இது மனித உரிமை மீறல்" என்று கண்டனம் தெரிவிக்கிறார்.[8]

சுககாமானது குறிப்பாக வறுமையில் வாடும் குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைத் திருமணங்களுக்கு எதிரானது. இந்த நடைமுறையானது, தொடர்புடைய குழந்தைகளுக்கு நியாயமற்றதும், பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை திருமணம் என்ற பெயரில் விற்பதற்கான முறையை வழங்குவதாயும் இருக்கிறது.

2018-ஆம் ஆண்டு வரையிலான நிலையின்படி, வறுமையில் இருந்து விடுபடுவதற்கான விளைபொருளாக குழந்தைகளைக் கருதுவதன் காரணமாக, மலேசியாவில் இன்னும் குழந்தைத் திருமணமானது நடைமுறையில் உள்ளது. ரசாலி மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை அழைத்து வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து சமூக மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Prof Dr Rahmat Mohamad appointed new Suhakam chairman". The Star. 1 July 2022. பார்க்கப்பட்ட நாள் 1 July 2022.
  2. SUHAKAM Act பரணிடப்பட்டது 23 மே 2012 at the வந்தவழி இயந்திரம்
  3. "Suruhanjaya Hak Asasi Manusia Malaysia (SUHAKAM)". www.suhakam.org.my. பார்க்கப்பட்ட நாள் 2019-06-05.
  4. "Suruhanjaya Hak Asasi Manusia Malaysia (SUHAKAM) – Commissioners". www.suhakam.org.my. Archived from the original on 2019-06-16. பார்க்கப்பட்ட நாள் 2019-06-05.
  5. "https://www.suhakam.org.my/biodata/". Suhakam Official Website. Archived from the original on 25 April 2020. பார்க்கப்பட்ட நாள் 18 February 2020. {{cite web}}: External link in |title= (help)
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-13. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  7. "Archived copy". Archived from the original on 2 June 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-05-31.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  8. "Suhakam warns of child trade if underage marriage allowed" (in en-US). Free Malaysia Today. 2018-09-19 இம் மூலத்தில் இருந்து 2018-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181014181639/https://www.freemalaysiatoday.com/category/nation/2018/09/19/ssuhakam-warns-of-child-trade-if-underage-marriage-allowed/.