வைக்கம் சரஸ்வதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைக்கம் சரஸ்வதி
பிறப்புவைக்கம், இந்தியா
பணிகருநாடக இசைப் பாடகி
அறியப்படுவதுகருநாடக இசைப் பாடகி, பின்னணிப் பாடகி
உறவினர்கள்ராஜன் (சகோதரர், மலையாள பின்னணிப் பாடகர்)[1]

வைக்கம் சரஸ்வதி (Vaikom Saraswathi) தென்னிந்திய கருநாடக இசைப் பாடகியும், திரைப்படப் பின்னணிப் பாடகியும் ஆவார்.[2] இவர் பாடிய பல கருநாடக இசைப் பாடல்கள் இசைத்தட்டுகளில் வெளிவந்துள்ளன.[2] இந்திய வானொலிகளில் 1940கள், 50களில் இவரது கச்சேரிகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.[3]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

வைக்கம் சரசுவதியின் தந்தை காலட்சேபதிலகம் என அழைக்கப்பட்ட கவாய் விசுவநாத பாகவதர் ஆவார்.[4] கதாகாலட்சேபம் செய்து கொண்டே இசையுலகில் நுழைந்தவர் சரசுவதி. ஜி. என். பாலசுப்பிரமணியத்தின் மாணவி.[4]

தமிழில் பின்னணிப் பாடல் முறை வரத்தொடங்கிய 1947-ஆம் ஆண்டில், கே. வி. மகாதேவன் வைக்கம் சரஸ்வதியை தன அமராவதி திரைப்படத்திலே பின்னணிப் பாடகியாக அறிமுகம் செய்தார்.[2] நடிகை பி. எஸ். சரோஜாவிற்காக கண்டேனடி, உன் திருவருள், அழகை ஆகிய பாடல்களை இத்திரைப்படத்தில் இவர் பாடினார்.[5] 1948 இல் வெளிவந்த ஜம்பம் திரைப்படத்தில் வாரும் இந்த வேளை, சேதி என்ன ஆகிய பாடல்களையும் இவர் பாடினார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Yachakan (1951)". Archived from the original on 2019-09-05. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 2.2 கலைமாமணி வாமனன் (29-04-2018). "'திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018' – 9". தினமலர். Archived from the original on 2019-09-05. பார்க்கப்பட்ட நாள் 5-09-2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "The Indian Listener" (PDF). Archived (PDF) from the original on 2019-09-05. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. 4.0 4.1 கானதாசன் (1948-10-31). "வித்வத் மண்டலம்". ஹனுமான்: 40. 
  5. 5.0 5.1 "வைக்கம் சரஸ்வதி". பேசும் படம். சனவரி 1949. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைக்கம்_சரஸ்வதி&oldid=3430839" இலிருந்து மீள்விக்கப்பட்டது