கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் கோவில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் கோண்டாவில் எனும் ஊரில் யாழ்-காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள ஒரு பிள்ளையார் கோவில் ஆகும். இங்கு வைகாசி மாதப் பூரணை தினத்தைத் தீர்த்தமாகக் கொண்டு பன்னிரண்டு நாட்கள் பெருந்திருவிழா நடைபெறும். இங்கு இலக்குமி, முருகன், நவக்கிரகம், வைரவர், தட்சணாமூர்த்தி ஆகிய பரிவாரத் தெய்வங்கள் காணப்படுகின்றன.