முதலாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதலாம் ஆங்கில-இடச்சுப் போர் (First Anglo-Dutch War), காமன்வெல்த் ஆஃப்[தெளிவுபடுத்துக] இங்கிலாந்தின் கடற்படைகளுக்கும் நெதர்லாந்தின் ஐக்கிய மாகாணங்கள் கடற்படைகளுக்கும் இடையில் முற்றிலுமாக கடலில் நடந்தது. வர்த்தகம் தொடர்பான சர்ச்சைகள் காரணமாக, இடச்சு வணிகக் கப்பல் மீது ஆங்கிலேயர்களின் தாக்குதல்களால் போர் ஆரம்பமானது, ஆனால் பரந்த கடற்படை நடவடிக்கைகளுக்கு விரிவாக்கப்பட்டது.[1]

முதலாம் ஆங்கில-இடச்சுப் போரில் இடச்சுக் குடியரசு படுதோல்வியை சந்தித்தது. இறுதியில், ஆங்கிலேய கடற்படை இங்கிலாந்தைச் சுற்றியுள்ள கடல்களின் மீது தங்கள் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியது. இப்போர் இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போருக்கு வழிவகுத்தது. இங்கிலாந்து மற்றும் அதன் காலனித்துவ நாடுகளுடன் வர்த்தகத்தில் ஆங்கில ஏகபோகத்தை இடச்சு ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

Reference[தொகு]

  1. http://www.historyofwar.org/articles/wars_anglodutch1.html