நேரலகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேரலகிரி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,453
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635121

நேரலகிரி (NERALAGIRI) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

பெயராய்வு[தொகு]

நேரல என்ற தெலுங்குச் சொல்லுக்கு நாவல் பழம் என்பது பொருளாகும். நாவல் மரங்கள் இங்கு அதிகமாக காணப்பட்டதால் இப்பெயரைப் பெற்றிருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[2]

அமைவிடம்[தொகு]

வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு இந்த ஊரானது, வேப்பனப்பள்ளியில் இருந்து 10 கிலோமீட்டரும், இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 272 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 299 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 1453 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 767, பெண்களின் எண்ணிக்கை 686 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 56.2% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/
  2. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 100. 
  3. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Veppanapalli/Neralagiri


"https://ta.wikipedia.org/w/index.php?title=நேரலகிரி&oldid=3657031" இலிருந்து மீள்விக்கப்பட்டது