ஜார்ஜ் பெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்தினால் ஜார்ஜ் பெல், 2012

கர்தினால் ஜார்ஜ் பெல் (George Pell, 8 சூன் 1941 – 10 சனவரி 2023)[1], ஆத்திரேலியாவைச் சேர்ந்த கத்தோலிக்க கர்தினால் ஆவார். இவர் 2014 முதல் 2019 முடிய போப்பாண்டவர் தலைமையிலான வாட்டிகனின் பொருளாதார செயலகத்திலும், 2013 முதல் 2018 வரை கர்தினால் அலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.[2][3]தற்போது வத்திகானில் பொருளாளராக இருக்கும் 77 வயதான ஜார்ஜ் பெல், கத்தோலிக்க திருச்சபையின் மூன்றாவது சக்திவாய்ந்த அதிகாரியாக உள்ளார்.

பாலியல் வழக்குகள்[தொகு]

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காக ஆஸ்திரேலியாவில் கார்டினல் ஜார்ஜ் பெல் குற்றவாளியாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். 1996-ஆம் ஆண்டில் மெல்போர்ன் கத்தோலிக்கப் பேராலாயத்தில் 16 வயதிற்குட்பட்ட இரண்டு பாடகர் சிறுவர்களிடம் ஜார்ஜ் பெல் பாலியல் அத்துமீறல் செய்தார் என கண்டறிந்தது 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_பெல்&oldid=3637940" இலிருந்து மீள்விக்கப்பட்டது