சுந்தரபாண்டியம் பேரூராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுந்தரபாண்டியம் (ஆங்கிலம்:Sundarapandiam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். சுந்தரபாண்டியம், கிருஷ்ணன்கோயில் - வத்திராயிருப்பு செல்லும் சாலையில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சுந்தரபாண்டியம் பேரூராட்சி 2,562 வீடுகளும், 8,513 மக்கள்தொகையும் கொண்டது.[1]

இது 16 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்ட சுந்தரபாண்டியம் பேரூராட்சி ஸ்ரீவில்லிப்புத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [2]

ஆதாரங்கள்[தொகு]

  1. [https://www.census2011.co.in/data/town/803793-sundarapandiam.html Sundarapandiam Population Census 2011]
  2. சுந்தரபாண்டியம் பேரூராட்சியின் இணையதளம்