நன்னூல் உரையாசிரியர்கள்
தமிழ் மொழியில் உள்ள இலக்கண நூல்களில் தலையாயது தொல்காப்பியமாகும். அதற்குப் பின் தோன்றிய இலக்கண நூல் பவணந்தி இயற்றிய நன்னூல் இன்றும் சிறப்புப் பெற்று விளங்குகிறது.[1] சுருக்கமும் செறிவும் இந்நூலின் தனிச் சிறப்பியல்புகளாகும்.
முதல் உரை[தொகு]
நன்னூலுக்குக் காலந்தோறும் பலர் உரை எழுதியுள்ளனர்.[2] ஒவ்வொரு உரைக்கும் தனிச்சிறப்பு இருக்கின்றது. நன்னூலுக்கு முதன் முதலில் தோன்றிய உரை மயிலைநாதர் உரையாகும்.[3]
உரையாசிரியர்கள்[தொகு]
- மயிலைநாதர்
- சங்கர நமச்சிவாயர்
- ஆண்டிப்புலவர்
- கூழங்கைத் தம்பிரான்
- இராமநுசக் கவிராயர்
- விசாகப்பெருமாள் ஐயர்
- ஆறுமுக நாவலர்
- சடகோப ராமாநுசாச்சாரியார்
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Nannool - Kaandigaivurai by Aarumuganavalar". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2022-07-10.
- ↑ ":: TVU ::". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2022-07-10.
- ↑ மு.வை.அரவிந்தன் - உரையாசிரியர்கள் - பக்கம் 569