நேமிசந்திரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஆச்சாரியா ஸ்ரீ

நேமிசந்திரர்

சித்தாந்த சக்கரவர்த்தி
நேமிசந்திரரின் சிற்பம், (திகம்பர மடத்தின் தலைமைத் துறவி)
சுய தரவுகள்
பிறப்பு10-ஆம் நூற்றாண்டு
இறப்பு10-ஆம் நூற்றாண்டு
சமயம்சமணம்
உட்குழுதிகம்பரம்

நேமிசந்திரர் (Nemichandra Siddhanta Chakravarty) சமணத்தின் திகம்பர சமயப் பிரிவின் அறிஞரான இவர் திரவியசம்கிரகம், கோமத்சாரம், ஜீவகாண்டம், கர்மகாண்டம், திரிலோகசாரம், லப்திசாரம் மற்றும் கச்சபனசாரம் போன்ற சமணத் தத்துவ நூல்களை இயற்றிய அறிஞர் ஆவார். [1][2]

வாழ்க்கை[தொகு]

திகம்பர சமண ஆச்சாரியர் நேமிசந்திரர் கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழுடன் விளங்கியவர்.[2] பொதுவாக இவரை சித்தாந்த சக்கரவர்த்தி என்றே அழைப்பர். [3]

சவுந்தரய்யாவின் ஆன்மீக குரு நேமிசந்திரருடனான தொடர்புகள், கர்நாடகாவின் சிமோகோ மாவட்டத்த்தின், நகர் தாலுக்காவில் உள்ள பத்மாவதி கோயில் கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறியலாம். [3]

பணிகள்[தொகு]

13 மார்ச் 980-இல் கோமதீஸ்வரர் சிலை குடமுழுக்கு விழாவை முன்னின்று நடத்தி வைத்தார்.[3][4]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Sangave 2001, ப. 205-206.
  2. 2.0 2.1 Umakant P. Shah 1987, ப. 249.
  3. 3.0 3.1 3.2 Sangave 2001, ப. 206.
  4. Tukol, T. K., Jainism in South India

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேமிசந்திரர்&oldid=3087785" இலிருந்து மீள்விக்கப்பட்டது