கொண்டைய ராஜு (ஓவியர்)
கொண்டைய ராஜு என்பவர் இந்திய ஓவியர் ஆவார். இவர் நாட்காட்டி ஓவியங்களின் பிதாமகர் என்று அறியப்படுகிறார்.[1]
சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். திருவண்ணாமலை ரமணர் மகரிசியிடம் சீடராக இருந்தார். பின்பு மதுரை பழனியப்பப் பிள்ளை நாடகக் கம்பெனியில் திரைச்சீலை ஓவியங்களை வரைந்து தந்தார்.[1]
தேவி ஆர்ட் ஸ்டுடியோ என்பதை 1942 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் தொடங்கினார்.[1] பின்பு சிவகாசி நாள்காட்டி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்து சமய இறை ஓவியங்களை வரைந்து தந்தார். இந்த ஓவிய நாட்காட்டிகள் புகழ்பெற்றவை.[2]
கனடா அருங்காட்சியகம்[தொகு]
ஸ்டீவன் எஸ். இங்கிலீஷ் என்பவர் கொண்டைய ராஜூவின் ஓவியங்களை ஆய்வு செய்துள்ளார். அத்துடன் ஓவியங்கள் வெளியான சிவகாசி நாள்காட்டிகளை சேகரித்து கனடா நாட்டின் அருங்காட்சியகத்திற்கு தந்துள்ளார்.[1]
சீடர்கள்[தொகு]
டி. எம். ராமலிங்கம், டி. எஸ். சுப்பையா, டி. எஸ். மீனாட்சி சுந்தரம், டி. எஸ். அருணாசலம், செண்பகராமன், சீனிவாசன்[1]