சத்திரசால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்திரசால்
புந்தேல்கண்ட் மகாராஜா
பிறப்பு(1649-05-04)4 மே 1649
கச்சார் கச்சனை திகம்கர் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
இறப்பு20 திசம்பர் 1731(1731-12-20) (அகவை 82)
துணைவர்தேவி குன்வாரி, ருக்கானி பாய் பேகம்
மரபுபுந்தேல இராசபுத்திர குலம்
தந்தைசம்பத் ராய்
தாய்லால் குன்வர்
மதம்இந்து சமயம் (நிஜானந்த சம்பிரதாயம்) [1]
மராத்திய பேஷ்வா பாஜிராவும், மன்னர் சத்திரசாலும்
மன்னர் சத்திரசாலின் மகளும், பேஷ்வா பாஜிராவின் மனைவியுமான மஸ்தானி

சத்திரசால் மகாராஜா (Maharaja Chhatrasal) (4 மே 1649 – 20 திசம்பர் 1731), மத்திய இந்தியாவின் புந்தேல்கண்ட் பகுதியின் பன்னா இராச்சியத்தின், புந்தேல இராசபுத்திர குல மன்னர் ஆவார். [2]

சத்திரசால், முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பை எதிர்த்து நின்று, புந்தேல்கண்ட் பகுதியில், 1731ல் பன்னா இராச்சியத்தை நிறுவினார்[3][4]

அவுரங்கசீப்பின் படைகளிடமிருந்து பன்னா இராச்சியத்தை காக்க உதவிய மராத்தியப் பேரரசின் பிரதம அமைச்சர் பாஜிராவிற்கு, மன்னர் சத்திரசால், தனது பாரசீக இரண்டாம் மனைவி ருக்கானி பேகத்திற்கு பிறந்த மஸ்தானியை திருமணம் செய்து வைத்தார்.

மரபுரிமைப் பேறுகள்[தொகு]

மன்னர் சத்திரசால் பெயரால் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் நகரம் மற்றும் சத்தர்பூர் மாவட்டம் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Pranami Sampraday
  2. Bundela Rajas of Bundelkhand (Panna)
  3. Panna State
  4. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 187–188. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4. 

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்திரசால்&oldid=3603096" இலிருந்து மீள்விக்கப்பட்டது