திருமலைராயன்பட்டினம் ராஜசோளீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமலைராயன்பட்டினம் ராஜசோளீசுவரர் கோயில் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருமலைராயன்பட்டினத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் ராஜசோளீசுவரர் ஆவார். இறைவி அபிராமி ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகங்கள், மருதலிங்கர், பைரவர், சூரியன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் ஒரு புறம் விநாயகரும், ம்று புறம் சனீசுவரர் சன்னதியும் உள்ளன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009