வளர்புரம் நாகேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வளர்புரம் நாகேசுவரர் கோயில் வேலூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

அரக்கோணம்-திருத்தணி சாலையில் தணிகைப்போளூர் என்னுமிடத்தில் வலப்புறத்தில், ரயில்வே லைனை அடுத்து இடப்புறம் செல்லும் சாலையில் 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இறைவன்[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் நாகேசுவரர் ஆவார். இறைவி சொர்ணவல்லி ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

நவக்கிரகம், சேக்கிழார் நால்வர், விநாயகர், விசுவநாத லிங்கம், சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009