பரஞ்சேர்வழி மத்யபுரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரஞ்சேர்வழி மத்யபுரீசுவரர் கோயில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

திருப்பூர் மாவட்டம் காங்கேயம்-சென்னிமலை/பெருந்துறை சாலையில் 8 கிமீ தொலைவில் உள்ள நால்ரோடு அருகே நத்தக்காடையூர் 10 கிமீ என்ற வழிகாட்டியுள்ள திசையில் வலப்புறத்தில் 3 கிமீ தொலைவில் உள்ளது.

இறைவன்,இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் மத்யுபுரீசுவரர் என்றும் நட்டூர்நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி சுகந்த குந்தளாம்பிகை என்றும், நட்டுவார் குழலியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். [1]

திருச்சுற்று[தொகு]

திருச்சுற்றில் கணபதி, பைரவர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் உள்ளனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009