சிவப்பள்ளி கைலாசநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவப்பள்ளி கைலாசநாதர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

திருச்செம்பள்ளி என்று தற்போது வழங்கப்படுகின்ற சிவப்பள், செம்பொன்னார் கோயிலின் ஒரு பகுதியாகும்.

இறைவன்,இறைவி[தொகு]

இறைவன் கைலாசநாதர் ஆவார். இறைவி பார்வதி ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

கோயில் முழுவதும் அழிந்துவிட அங்கிருந்த கைலாசநாதர், பார்வதி, வீரபத்திரர், சண்டேசுவரர் ஆகிய சிற்பங்களை இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலின் மகா மண்டபத்தில் அமைத்துள்ளனர். மகா மண்டபத்தில் கைலாச நாதரும், அருகில் வீரபத்திரரும், மறுபுறம் பார்வதியும் உள்ளனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009