திருவண்ணாமலை பெருநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவண்ணாமலை மாநகராட்சி இந்தியாவின் தமிழக மாநிலத்தில் உள்ள மிகப் பழமையான நகராட்சிகளில் ஒன்றாகும். சனவரி 12 , 1866 அன்று இது உருவாக்கப்பட்டது. இதன் பட்டயம் (தனிபுரிமை சாசனம்) டிசம்பர் 2, 1865ல் கிழக்கு இந்திய கம்பனியரால் எற்படுத்தப்பட்ட , திருவண்ணாமலை நகராட்சி மற்றும் ஏனையப் பிரதேசங்கள் என்ற அரசியலமைப்பின் பெயரால் கோட்டையின் 21 மைல்கள் தொலைவு எல்லையை வரையறையாகக் கொண்டு செயற்பட்டது. இது திருவண்ணாமலை நகராண்மைக் கழகம் என்னும் பெயரில் இந்தியா விடுதலை அடையும் வரை செயற்பட்டது.

  • திருவண்ணாமலை 1866 இல் "மூன்றாம் நிலை நகராட்சி"யாக உருவாக்கபெற்றது .
  • 1946 இல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டு ,
  • 1971 இல் முதல் நிலை நகரட்சியாக உருவானது .
  • 1998 இல் தேர்வு நிலை நகராட்சியாக ,
  • 2003 இல் "சிறப்பு நிலை நகராட்சி"(பெருநகராட்சி) யாகவும் தரம் உயர்த்தப்பட்டது .
  • 2024 இருந்து திருவண்ணமலை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

திருவண்ணாமலை பெருநகராட்சி அன்றிருந்தநிலை மற்றும் தற்பொழுது[தொகு]

ஆண்டு முந்தய
நகராட்சியின் நிலை
தற்பொழுதய
நகராட்சியின் நிலை
கோட்டம் 1941 17 39
மக்கள் தொகை 1941 36 ஆயிரம் 1.75 இலட்சம்
பரப்பளவு 1941 2.3 ச.மைல் 14 ச.கி.மீ