சந்திர வம்சம், வங்காளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்திர வம்சம் (Chandra dynasty) பண்டைய வங்காளத்தின் ஹரிகேள இராச்சியம், சமதாத இராச்சியம் மற்றும் வங்க நாடு மற்றும் காமரூபம் பகுதிகளை, கிபி பத்தாம் நூற்றாண்டு முதல், 150 ஆண்டுகள் ஆட்சி செய்த அரச குலமாகும். சந்திர வம்சத்தவர்களின் தலைநகரம், தற்கால முன்சிகஞ்ச் எனப்படும் விக்கிரம்பூர் நகரம் ஆகும். இக்குலத்தார், வங்காளத்தின் வடமேற்கு பகுதிகளை ஆண்ட பாலப் பேரரசுக்கு எதிராக இருந்தவர்கள்.

தற்கால அசாம் பகுதிகளை ஆண்ட வர்மன் அரசமரபினர், சந்திர வம்ச மன்னர்களை வென்று ஹரிகேள இராச்சியத்தைக் கைப்பற்றினர்.[1]

சந்திர வம்ச ஆட்சியாளரகள்[தொகு]

சந்திர வம்சத்தின் ஐந்து மன்னர்கள்:

  • திரைலோக்கியசந்திரன் (கிபி 900–930)
  • சிறீசந்திரன் (கிபி 930–975)
  • கல்யாணசந்திரன் (கிபி 975–1000)
  • லதாஹசந்திரன் (கிபி 1000–1020)
  • கோவிந்தசந்திரன் (கிபி 1020–1050)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ray, Niharranjan (1994). History of the Bengali People. Calcutta: Orient Longman Ltd.. பக். 84. 

ஆதார நூற்பட்டி[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திர_வம்சம்,_வங்காளம்&oldid=2547606" இலிருந்து மீள்விக்கப்பட்டது