பரேஷ் சந்திர பட்டாச்சாரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரேஷ் சந்திரா பட்டாச்சாாியா: (பிறப்பு மார்ச் 1-1903)[1] இவா் இந்திய ரிசர்வ் வங்கியின் ஏழாவது கவா்னராக 1 மார்ச் 1962 முதல் 30 ஜூன் 1967 வரை பதவி வகித்தாா்.[2]   அவரது முன்னோடிகளை  போல் அல்லாமல் இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை (IA&AS) உறுப்பினராகவும்  இவா்  இருந்துள்ளாா். அவர் 1946 புத்தாண்டை கௌரவ படுத்தும் விதமாக பிரிட்டிஷ் எம்பயர் (OBE) ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.[3]  அவர் நிதி அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றினார். பின்னர் கவா்னராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் இந்திய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவராகவும் இருந்துள்ளாா்.

இந்தியாவில் தனியாா் வங்கிகளை தேசியமயமாக்கப்படுவதை கடுமையாக எதிா்த்தாா்.[4] அவ்வாறு வங்கிகள்  தேசியமயமாக்க ஆகும் செலவுகள் பற்றி உள்துறை துணை பிரதம மந்திரி மொரார்ஜி தேசாய் எச்சரிக்கைக்கு கடிதம் எழுதினார். தனது பதவிக்காலத்தின் போது, பொருளாதார காரணங்களுக்காக  நாணயங்களின் அளவை குறிப்பாக 5, 10 மற்றும் 100 நோட்டுகளின் அளவு குறைக்கப்பட்டது.[5]

பட்டாச்சாாியாவின் பதவி காலத்தில், 1964 ஆம் ஆண்டு இந்தியாவின் தொழிற்துறை மேம்பாட்டு வங்கி, 1963 இல் இந்தியாவின் வேளாண் மறுநிதிக் கூட்டுத்தாபனம்தேசியமயமாக்கல்மற்றும் 1964 ல்  யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ஆகியவைகள் நிறுவப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. https://books.google.com/books?id=CnwYAAAAMAAJ&q=%22Bhattacharya,+Paresh+Chandra%22&dq=%22Bhattacharya,+Paresh+Chandra%22&hl=en&sa=X&ei=U3CbUtqzH4KUtQaXsYHQBw&ved=0CDIQ6AEwAQ
  2. "P C Bhattacharya". Reserve Bank of India. பார்க்கப்பட்ட நாள் 2008-09-15.
  3. "No. 37598". இலண்டன் கசெட் (Supplement). 4 June 1946. p. 2789.
  4. The Congress Split[தொடர்பிழந்த இணைப்பு] Accidental India: A History of the Nation's Passage through Crisis and Change By Shankkar Aiyar
  5. P. C. Bhattacharya Bio பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம் In.com Retrieved on 23 August 2013