எத்தியோப்பிய உள்நாட்டுப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எத்தியோப்பிய உள்நாட்டுப்போரானது (Ethiopian Civil War) 12 செப்டம்பர் 1974 அன்று அரசர் ஹைலி_செலாசிக்கு எதிராக மாக்சிச-லெனினிச பாதுகாப்பு படைகள், காவல், பிராந்திய இராணுவம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புக் குழுவால் (சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கம்) தொடங்கப்பட்ட  இராணுவப்_புரட்சி ஆகும். கிளர்ச்சியாளர்களின்  கூட்டணியான எத்தியோப்பிய மக்களின் புரட்சிகர மக்களாட்சி முன்னணி (EPRDF), 1991-ல் அரசை வீழ்த்தும் வரை இப்போர் நடந்தது[1]. இப்போரில் குறைந்தபட்சம் 14 லட்ச மக்கள் உயிரிழந்தனர்.  

1970களில்[தொகு]

மார்ச் 1975 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களால் மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. இளவரசர் அச்பாவ் வோச்சென் லண்டனில் நாடு கடந்து வாழ்ந்து வந்தார். ஏனைய பல அரச குடும்பத்தினரும் இலண்டனில் வசித்து வந்தனர். புரட்சியின் போது எத்தியோப்பாவில் இருந்த ஏனைய அரச குடும்பத்தினர் சிறைப்படுத்தப்பட்டனர்.   சிறையிலடைக்கப்பட்டவர்களில், இளவரசர் வோச்செனின் தந்தை ஹைலி செலாசி, அவரின் முதல் திருமணத்தின் வழி வந்த மகள் இளவரசி சிகயேகு, அவரின் சகோதரி இளவரசி டேனக்னேவொர்க் மற்றும் பல  உறவினர்களும் அடங்குவர். 1975 ல் இளவரசரின் தந்தை ஹைலி செலாசியும், 1977ல் அவரின் மகள் இளவரசி சிகயேகுவும் சிறையில் மரணமடைந்தனர். 1988 வரை அரச குடும்பத்தைச் சேர்ந்த  பெண்களும் [2]  1989  வரை ஆண்களும் [3] சிறையிலடைக்கப்பட்டிருந்தனர். 1975-77 களில் சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கம் (Derg) அதன் அரசியல் எதிரிகளை அகற்றியது. இக்குழுவுக்கு எதிராக எத்தியோப்பிய சிவப்பு தீவிரவாதத்தை அறிவித்தல் மற்றும் தூண்டுவித்தலின் விளைவாக இந்த நடவடிக்கை  எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர கட்சி (EPRP) போன்ற எதிர்க்கட்சிக் குழுக்களின் மீது எடுக்கப்பட்டது. இக்குழுவைப் போல எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர கட்சியும் மாக்சிச-லெனினிசத்தைச் சேர்ந்ததாகும்.  மரண தண்டனை, கொலை, சித்திரவதை போன்ற கொடூர உத்திகள் இருதரப்பினராலும் கையாளப்பட்டன. பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் எவ்வித விசாரணையுமின்றி சிறைப்படுத்தப்பட்டனர்.

எத்தியோப்பிய சிவப்பு தீவிரவாதமானது இக்கொடூரமான போரின்  நகர்புற கொரில்லா அத்தியாயமாகும். எரித்திரிய விடுதைலைக்காகப் போராடிய கொரில்லா வீரர்களையும்,  ஏனைய கிளர்ச்சி குழுக்களான பழமைவாத முடியாட்சிக்கு ஆதரவான எத்தியோப்பிய மக்களாட்சி ஒன்றியம் (EDU),  தீவிர இடதுசாரிக் கட்சியான எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர கட்சி (EPRP) ஆகியவற்றையும் அரசாங்கம் ஆட்சியிலிருந்தவரை எதிர்த்து போராடியது.  இக்கலகத்தில் டிக்ரயன் மக்கள் விடுதலை முன்னணி  (TPLF), வெற்றியாளராக மாறியது. அச்சமயத்தில் டிக்ரயன் மக்கள் விடுதலை முன்னணி ஒரு சிறிய குழுவாகும். சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கம் (Derg)  1978 இன் செமின் ஜெமச்ச வரை இவர்களுக்கெதிரான தீவிர பிரச்சாரத்தை முன்னெடுக்கவில்லை. 

அதே நேரத்தில்  சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கம் (Derg) சோமாலியப் படையெடுப்பை 1977 ல் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சோமாலி மக்கள் அதிகம் வாழும் எத்தியோப்பாவின் கிழக்குப் பகுதிகளை சோமாலியா ஒருங்கிணைக்கப் பார்த்தது. சோவியத் ஒன்றியம் மற்றும் கியூபாவின் இராணுவ உதவியுடன் எத்தியோப்பிய இராணுவம் சோமாலி இராணுவத்தைத் தோற்கடித்தது. சோமாலி இராணுவம் மேற்கு சோமாலி விடுதலை முன்னணியால் ஆதரிக்கப்பட்டிருந்தது. சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கத்தின் கீழ் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில்  வார்சா உடன்பாட்டின் நெருங்கிய நட்பு நாடாக  எத்தியோப்பியா மாறியது.  மேலும் சோவியத் ஒன்றியம், லிபியா, கிழக்கு ஜெர்மனி, கியூபா, வட கொரியாஆகிய நாடுகளின் பலமான இராணுவ உதவியுடன் எத்தியோப்பியா அப்பகுதியின் இராணுவ பலமிக்க நாடாக மாறியது. பெரும்பாலான தொழில் நிறுவனங்களும், தனியார் நில உடைமைகளும் 1975ல் சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கத்தால் (Derg) நாட்டுடமையாக்கப்பட்டன.

1980களில்[தொகு]

High-ranking Derg members, Mengistu Haile Mariam, Teferi Banti, and Atnafu Abate

புரட்சியின் போது, சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கத்தின் (Derg) முக்கிய முழக்கமான "உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்பதை நிலக்கிழார்களிடம் இருந்த நிலத்தை அதனை உழுபவர்களிடம் மறுபகிர்வு செய்ததன் மூலம் பூர்த்தி செய்தது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]