சந்திரகீர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்திரகீர்த்தி (Chandrakirti) (கிபி 600 - 650) மத்தியமிகப் பௌத்தப் பிரிவு அறிஞரும், நாகார்ஜுனரின் (கிபி 150 - 250) இலக்கியங்களுக்கு உரை எழுதியவரும் ஆவார். இவரது மாணவர்களில் புகழ் பெற்றவர் ஆரியதேவர் ஆவார்.[1]

சந்திரகீர்த்தியின் வாழ்க்கையைப் பற்றிய செய்திகள் மிகக்குறைவே. திபெத்திய பௌத்த இலக்கியங்களின் படி, தென்னிந்தியாவின் சமந்தா நகரத்தில் பிறந்த[2] சந்திரகீர்த்தி, கமலபுத்தியின் மாணவர் என்றும் அறியப்படுகிறார். பௌத்த பிக்குவாகன சந்திரகீர்த்தி, நாலாந்தா பல்கலைக் கழகத்தில் பௌத்த தத்துவங்களைப் பயின்றவர். [1]

முக்கியப் படைப்புகள்[தொகு]

  • பிரசன்னபாடம் (Clear Words) : நாகார்ஜுனரின் மூலமத்தியமிகம் நூலின் விளக்க உரை [3]
  • சதுஷ்டாக டீக்கா (Commentary on the 400): ஆரியாதேவரின் 400 செய்யுட்களின் விளக்க உரை[4]
  • யுக்தி சஸ்டிகா விருத்தி (Yuktiṣaṣṭikāvṛtti) (பகுத்தறிவு தொடர்பான 60 செய்யுட்களுக்கான விளக்க உரை)
  • சூன்யதாஷ்டக விருத்தி - (சூன்யம் குறித்தான 70 செய்யுட்களுக்கான விளக்க உரை)
  • திரிசரண சப்தாதி (Triśaraṇasaptati) - (சரணத்திற்கான 70 செய்யுட்கள்)

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Buswell Jr. & Lopez Jr. 2013, Entry for Candrakīrti.
  2. P. 298 Global History of Philosophy: The Patristic-Sutra Period, Volume 3, By John C. Plott
  3. Ocean of Nectar: The True Nature of All Things, Tharpa Publications (1995) ISBN 978-0-948006-23-4
  4. Lang, Karen C. (2003). Four Illusions: Candrakīrti's Advice to Travelers on the Bodhisattva Path. Oxford University Press. 

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரகீர்த்தி&oldid=2711559" இலிருந்து மீள்விக்கப்பட்டது